ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 ரூ.4.29 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. கிராண்ட் ஐ 10 ஹேட்ச்பேக் ஐ10 மற்றும் ஐ20 கார்களுக்கு இடையில் நிறுத்தப்பட்டுள்ளது.4 விதமான மாறுபட்டவைகளில் கிடைக்கும். அவை ஏரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா ஆகும். ஏரா வேரியண்டில் பவர் ஸ்டீயரிங், இம்மொபைல்சர் மற்றும் ஏசி போன்ற வசதிகள் உள்ளன.மேக்னா வேரியண்டில் ஏரா வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக சென்ட்ரல் லாக்கிங், கீலெஸ் என்ட்ரி, பனி விளக்குகள், பவர் வின்டோ, ரியர் ஏர்-கான் வின்டோ, எலக்ட்ரானிக் அட்ஜஸ்ட் கண்ணாடி போன்றவை உள்ளன.ஸ்போர்ட்ஸ் வேரியண்டில் மேக்னா வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக யூஎஸ்பி தொடர்பு, க்ளோவ் பாக்ஸ், புஸ் பட்டன் ஸ்டார்ட்.டாப் வேரியண்டான ஆஸ்டாவில் ரியர் ஸ்பாய்லர், ரியர் வைப்பர் வாஸ், பூளூடூத் இணைப்பு, ஸ்டீயரீங் ஆடியோ கன்ட்ரோல், ஆலாய் வீல், டிரைவர் சீட் ஹைட் அட்ஜஸ்ட் போன்ற வசதிகள் உள்ளன.1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 83பிஎஸ்…
Author: MR.Durai
ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாசடர் பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடுகள் கொண்ட டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ள காரினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.1.5 லிட்டர் டீசல் மிக அதிகப்படியான ஆற்றல் மற்றும் டார்கினை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. என்கோர் என்ற ஸ்டிக்கரிங் பொறிக்கப்பட்டவை டாக்ஸி மார்க்கெட்டில் தனி இடத்தினை பிடிக்கும் என எச்எம் நம்புகின்றது.மாநகரங்களில் இனி அம்பாசிடர் விற்பனை அதிகரிக்கும். அம்பாசடர் காரின் விலை 4.75 லட்சம் ஆகும்.
ஹோண்டா இந்திய பிரிவு வரலாற்றில் அமேஸ் செடான் காரின் விற்பனை மிக பெரும் மைல்கல்லாக அமைந்துள்ளது. ஹோண்டா அமேஸ் அறிமுகம் செய்யப்பட்ட 4 மாதங்களில் 30000 கார்களை விற்பனை செய்துள்ளது.சிறப்பான இடவசதி, அதிகப்படியான மைலேஜ் மற்றும் ஹோண்டாவின் என்ஜின் தரம் என பலவற்றை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டுள்ள அமேஸ் தொடர்ந்து முன்பதிவிலும் குறைவில்லாமல் பதிவு செய்யப்படுகின்றது.டீசல் அமேஸ் காரின் அபரிதமான மைலேஜ் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் சிறப்பான சொகுசு தன்மையை அமேஸ் வழங்குகின்றது.இந்திய மக்களின் குடும்ப காராக அமேஸ் வலம் வரவேண்டும் என்பதே ஹோண்டாவின் நம்பிகையாகும்.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் கார் நாளை விற்பனைக்கு வரவுள்ள நிலையில் கிராண்ட் ஐ10 காரின் பல விவரங்கள் வெளிவந்துள்ளன. சிறிய கார்களின் மத்தியில் கடும் போட்டியை கிராண்ட் ஐ10 ஏற்படுத்துவது உறுதியாகியுள்ளது.ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் 5 விதமான மாறுபட்டவைகளல் கிடைக்கும். அவை எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா ஆப்ஷனல் போன்றவைகளில் விற்பனைக்கு வரவுள்ளது. மிகவும் நேர்த்தியான ஃபூளூடியக் டிசைன் நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள கிராண்ட் ஐ10 மாபெரும் வரவேற்பினை பெறும்.தற்பொழுதுள்ள ஐ10 மற்றும் ஐ20 கார்களுக்கு இடையில் உருவாக்கப்பட்டுள்ள கிராண்ட் ஐ10 3765மிமீ நீளமும், 1660மிமீ அகலமும் மற்றும் 1520மிமீ உயரத்தினை கொண்டுள்ளது.ஹூண்டாய் கிராண்ட் ஐ10 பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும். 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 83பிஎஸ் மற்றும் டார்க் 114என்எம் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.புதிய 1.1 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.…
டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் இந்தியாவில் ரூ.29.75 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இரண்டு விதமான ஆற்றலை கொண்டு செயல்படும் ஹைபிரிட் நுட்பத்தில் டொயோட்டாவின் கை உலகயளவில் ஓங்கிநிற்கின்றது.பெங்களூரில் உள்ள ஆலையில் இதற்க்கான தனி பிரிவில் ஹைபிரிட் கேம்ரி உற்பத்தி செய்யப்படுகின்றது. 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இவை இரண்டும் சேர்த்து வெளிப்படுத்தும் ஆற்றல் 205பிஎஸ் ஆகும். எலக்ட்ரானிக் சிவிடி கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.ஹைபிரிட் கேம்ரி லிட்டருக்கு 19.16கிமீ மைலேஜ் தரும் என டொயோட்டா தெரிவித்துள்ளது. 1 கிலோமீட்டருக்கு 122.8 கிராம் கார்பன் வெளிப்படுத்தும். 4 விதமான வண்ணங்களில் கிரே மெட்டாலிக், வெள்ளை பியரல் கிரஸ்டல் சைன், சில்வர் மெட்டாலிக் மற்றும் ஆட்டியூட் பிளாக்.17 இன்ச்ஆலாய் வீல் , 3 விதமான கிளைமேட் கன்ட்ரோல் கொண்ட ஏசி, டிராக்ஸன் கன்ட்ரோல், 4 காற்றுப்பைகள் என பல வசதிகளை கேம்ரி கொண்டுள்ளது.டொயோட்டா ஹைபிரிட் கேம்ரி விலை ரூ29.75 லட்சம்…
எஸ்யூவி கார்களுக்கான புதிய விதிமுறையை சில மாதங்களுக்கு முன் வெளிவந்த மத்திய பட்ஜெட்டில் மாற்றியமைக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதாவது 170மிமீ உயரத்திற்க்கு அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட் கார்களை எஸ்யூவியாக வரையறுத்தது.இதுபோன்ற கார்களுக்கு ரூ.30000 வரை வரி உயர்த்தப்பட்டது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது நாட்டின் மிக பெரிய யூட்லட்டி வாகன தயாரிப்பாளாரான மஹிந்திரா நிறுவனம்தான.வரியினை தவிர்க்க மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காருக்கு ஸ்டோன் கார்டு என்ற கவரினை பயன்படுத்தி 200மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸை 160 ஆக குறைத்தது. இதனால் வரி உயர்வில் இருந்து தப்பித்தது.ஆனாலும் மத்திய அரசு விடுவதாக இல்லை மீண்டும் புதிய விதியை வகுக்க திட்டமிட்டுள்ளதாம். அதாவது முழுமையாக நிரப்பட்ட நிலையிலே கிரவுன்ட் கிளியரன்ஸ் அளக்கப்படுகிறது. ஆனால் இந்த விதியை மாற்றி முழுமையாக கட்டமைக்கப்படாதா நிலையில் கிரவுன்ட் கிளியரன்ஸ் அளக்கப்படலாம் என தகவல்கள் கசிந்துள்ளது.இதனால் பெரிதும் பாதிக்கப்போவது மீண்டும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம்தான் .இந்த திருத்தங்கள் அனைத்தும் மஹிந்திராவுக்கு எதிராகவே…