• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ.9,000 கோடி இழப்பு.., திவாலாகும் நிலையில் 7 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள்

by MR.Durai
10 August 2023, 11:02 am
in Bike News
0
ShareTweetSend

hero electric optima cx

இந்திய சந்தையில் எலக்ட்ரிக் வாகன அறிமுகத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பிரபலமாக இருந்த ஹீரோ எலக்ட்ரிக், ஓகினவா, ஆம்பியர், ரிவோல்ட், பென்லிங், லோகி ஆட்டோ மற்றும் ஏஎம்ஓ மொபைலிட்டி போன்ற நிறுவனங்களள் FAME மானியம் பெறுவதற்கு மோசடியில் ஈடுபட்ட புகாரில் சிக்கியதால் மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் மானியம் நிறுத்தம் மற்றும் தீர்க்கப்படாத நிலுவைத் தொகை காரணமாக ரூ.9,075 கோடிக்கு மேல் இழப்பீட்டை சந்தித்துள்ளனர்.

மின்சார வாகனங்களின் உற்பத்தியாளர்களின் சங்கம் (SMEV) குறிப்பிடுகையில் ஏழு நிறுவனங்களின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது, இதற்கா தீர்வை முன்மொழிந்துள்ளது.

E2W losses

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 7 நிறுவனங்களும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த உதிரிபாகங்களை உள்நாட்டில் தயாரித்ததாக மோசடியான தகவலை வழங்கி மானியம் பெற்று வந்த புகாரில் சிக்கின. இந்நிலையில் அரசு கடந்த 2022 முதல் மானியத்தை நிறுத்தி வைத்திருந்தது. மேலும், மோசடியில் ஈடுபட்டு விற்பனை செய்யபட்ட வாகனங்களுக்கான மானியத்தை திரும்ப பெற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

SMEV மேற்கொண்ட தணிக்கையில், பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஏற்பட்ட மொத்த சேதங்கள், சந்தையின் அடிப்படையில் ₹9,000 கோடிக்கு மேல் இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. 2022 முதல் கனரக தொழில்துறை அமைச்சகம் தங்கள் மானியங்களை நிறுத்தி வைத்ததில் இருந்து, செலுத்தப்படாத நிலுவைத் தொகை, வட்டி, கடன், சந்தைப் பங்கு இழப்பு, நற்பெயர் இழப்பு, மூலதனச் செலவு மற்றும் சாத்தியமான மறுமூலதனம் ஆகியவற்றின் மொத்த இழப்புகள் சுமார் ₹9,075 கோடி தணிக்கை மதிப்பிடுகிறது.

இந்த நிலை தொடர்ந்தால், சில நிறுவனங்கள் ஒருபோதும் மீளாமல் போகலாம், மேலும் சில நிறுவனங்கள் முடிவுக்கு வரலாம். விரைவான தீர்வுக்கான அவசியத்தை எடுத்துக்காட்டி, SMEV தலைவர் சஞ்சய் கவுல், தொழில்துறையானது வருங்கால முதலீட்டாளர்களுடன் பயன்படுத்துவதில் ஈடுபடுவது முரண்பாடாக உள்ளது என்று சுட்டிக்காட்டினார். இது மிகப்பெரிய தாக்கத்தை எலக்ட்ரிக் தயாரிப்பாளர்கள் மத்தியில் ஏற்படும்.

மத்திய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், 7 OEM நிறுவனங்கள் தினசரி அதிகரித்து வரும் இழப்புகளால் திவாலாகும் நிலையை அடைவதாகக் கூறினார். .இந்த OEM தண்டிப்பதே அமைச்சகத்தின் நோக்கமாக இருந்தால், இந்தத் தண்டனை 22 மாதங்களுக்கும் மேலாக தொடர்கின்றது. ஏனெனில் 18-22 மாதங்கள் வரை செலுத்தப்படாத மானியங்கள் மற்றும் பழைய மானியங்களைத் திரும்பப் பெறுவதற்கு MHI இன் கோரிக்கையைத் தவிர, அவர்களின் புதிய வாகனங்களை NAB போர்ட்டலில் பதிவேற்ற அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையை தளர்த்தி 7 நிறுவனங்களுக்கு புதிய கடன் வழங்குவது, வாகனங்களுக்கு மானியம் வழங்குவது மேற்கொண்டால் மட்டும் இந்திய இவி விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

source – PTI

Tags: Electric Scooter
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version