சென்னையில் டொயோட்டா ஓட்டுநர் பயிற்சி பள்ளி திறப்பு

டொயோட்டா கிரிலோஷ்கர் நிறுவனத்தின் ஓட்டுநர் பயிற்சி பள்ளி முதன்முறையாக தமிழ்நாட்டில் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரனையில் அமைந்துள்ள லேன்சன் டொயோட்டா டீலரில் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 2015யில் முதன்முறையாக லக்னோவில் தொடங்கப்பட்ட டொயோட்டா டிரைவிங் ஸ்கூல் தற்பொழுது ஹைத்திராபாத் , கொச்சி மற்றும் சென்னை என மொத்தம் 4 நகரங்களில் செயல்பட்டு வருகின்றது. பாதுகாப்பான கார் , பாதுகாப்பான ஓட்டுநர் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள ஓட்டுனர் பள்ளியில் வாகனத்தினை பற்றிய அடிப்படை விசயங்கள் முதல் சாலை விதிமுறைகள் , பாதுகாப்பு அம்சங்கள் , சாலை ஒழுக்கம் என பலவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் டொயோட்டா இந்தியா பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகின்றது.

காரில் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை அம்சங்களான துனைவீலை மாற்றுவது , ஸ்டார்ட்டிங் பிரச்சனை , பேட்டரி பிரச்சனை போன்ற சமயங்களில் எவ்வாறு செயல்படுவது  மேலும் முதலுதவி , ஆபத்து காலங்களில் செய்ய வேண்டியவை  என்ன , ஓட்டுனருக்கான உடை அணியும் முறைகள் , அதிக தொலைவு பயணங்களில் கையாள வேண்டிய நடைமுறைகள் என பலவற்றை கற்றுதரும் பயிற்சி பள்ளியாக செயல்படும்.

ஸ்டார்ட் , ஸ்மார்ட் என இருவிதமான பாடத்திட்டத்தினை கொண்டுள்ள டொயோட்டா ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் ஸ்டார்ட் பாடமானது தொடக்கநிலை ஓட்டுனர்களுக்கும் , ஸ்மார்ட் பாடம் டாக்சி டிரைவர்கள் போன்றவர்களுக்கு மேம்பட்ட பயற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

Exit mobile version