Home Bike News

இந்தியாவின் முதல் பிஎஸ் 6 டூ வீலரை வெளியிடும் ஹோண்டா

ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிஷன்

பாரத் ஸ்டேஜ் 6 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்ட ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மாடல் FI என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு ஜூன் 12, 2019-ல் வெளி வரவுள்ளது. இந்தியாவின் முதல் இரு சக்கர வாகனத்தில் பிஎஸ் 6 என்ஜின் பெற்ற மாடலாக ஹோண்டா விற்பனைக்கு வெளியிட உள்ளது.

ஜூன் 12 ஆம் தேதி ஹோண்டா நிறுவனம், முதல் பிஎஸ் 6 என்ஜின் பெற்ற மாடலை தவிர மற்றொரு ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை விற்பனைக்கு வெளியிடும் வாய்ப்புகள் உள்ளது.

முதல் ஹோண்டா பிஎஸ் 6 ஸ்கூட்டர்

‘a quiet revolution’ என்ற கோஷத்துடன் வெளியிடப்பட்டுள்ள டீசரில் எஃப்ஐ என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு வெளியிட உள்ளது. முதன்முறையாக இந்தியாவில் வெளியிடப்பட உள்ள 110சிசி என்ஜின் பெற்ற எஃப்ஐ மாடல் மிக நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்த ஸ்கூட்டரில் ஸ்மார்ட்போனை இணைக்கும் வகையிலான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரை பொருத்தப்பட்டிருக்கும் என கருதப்படுகின்றது. முழுமையான எல்இடி விளக்கு, எல்இடி டெயில் விளக்கு, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளை கொண்டதாக அமைந்திருக்கலாம்.

ஹோண்டா நிறுவனம், சமீபத்தில் லிமிடெட் எடிசன் பெற்ற ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் மற்றும் ஹோண்டா சிபி ஷைன் ஆகிய இரு மாடல்களை வெளியிட்டுள்ளது.

Exit mobile version