திரும்ப பெறப்படுகிறது மாருதி சியாஸ் பேஸ்லிப்ட்

மாருதி சுசூகி நிறுவனம் தங்கள் சியாஸ் பேஸ்லிப்ட் டீசல் கார்களை திரும்ப பெற உள்ளதாக அறிவித்துள்ளது. ஸ்பீடாமீட்டரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதை மாற்றும் நோக்கில் இந்த திரும்ப பெறுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த ஆகஸ்ட் 1 மற்றும் செப்டம்பர் 21 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் இந்த பிரச்சினை உள்ளது என்றும் ஜெட்டா மற்றும் ஆல்பா வகை கார்களிலும் இந்த பிரச்சினை உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த ஸ்பீடா மீட்டரை மாற்ற தோராயமாக 800 யூனிட் சியாஸ் கார்கள் திரும்ப பெறப்படுகிறது என்று நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்பீடாமீட்டர் மாற்ற செய்ய எந்தவித கட்டணமும் வசூல் செய்யப்படாது என்றும், கடந்த அக்டோபர் 29 முதல் டீலர்கள் மூலம் வாகன உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்பீடாமீட்டர் மாற்றும் பணிகள் நெக்சா சர்விஸ் மையங்களில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக மாருதி சியாஸ் கார்கள் C-வகை கார்களில் அதிகம் விற்பனையாகும் கார்களாக இருந்து வருகிறது. இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்டது மூலம் 7000 சியாஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விற்பனை மூலம் மாருதி கார்களின் மொத்த விற்பனை 15 ஆயிரம் யூனிட்டை எட்டியது.

Exit mobile version