Site icon Automobile Tamilan

அக்டோபர் 4ல் வெளியாகிறது 2018 ஃபோர்டு ஆஸ்பயர்

ஃபோர்டு நிறுவனம் தனது 2018 ஆஸ்பயர் கார்களை வரும் அக்டோபர் 4ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஆஸ்பயர் செடான் கார்கள், இந்தாண்டின் முற்பகுதியில் சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஒரு வகையான கார்கள், தென்ஆப்பிரிக்கா மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார்கள், குஜராத்தில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் சனந்த் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி, செடான்களில் இந்தியா ஸ்பெக் கார்களுக்கு ஏற்ற வகையில், பெரும்பாலான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும். இந்த மாற்றங்கள், புதிய பம்பர்களுடன் சில்வர் இன்செர்ட்ஸ், இது புதிய ப்ரீ ஸ்டைலில் இம்டபெற்ற பிளாக் போன்று இருக்கும். மாற்றியமைக்கப்பட்ட ஹெட்லேம்ப் கிளச்சர் மற்றும் பெரியளவிலான முன்புற கிரில்கள், இந்த கிரில்கள் சில்வர் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. மேலும், காரின் ரியர் பகுதியில் புதிய இன்செர்ட்கள், ரியர் பம்பர் மற்றும் சப்டேல் பிளாக் லிப்களுடன் கூடிய பின்புறமும் கவர்சிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் வெளியிடப்பட்ட கார்கள், ஆக்ஸ்போர்ட் ஒயிட், டீப் இம்பேக்ட் ப்ளூ, மூன்டஸ்ட் சில்வர், ரூபி ரெட், ஸ்மோகி (கிரே) மற்றும் ஒயிட் கோல்டு என ஆறு கலர் ஆப்சன்களில் வெளியானது.

காரின் உட்புறத்தில், புதிய வடிவிலான டேஷ்போர்டுகள் பொருத்தப்பட்டுள்ளது. தென் ஆப்பிர்க்க கார்களில் டாப் டைட்டானியம் ரிம் மற்றும் 6.5 இன்ச் Sync 3 இன்போடேய்ன்மென்ட்கள் இடம் பெற்றிருக்கவில்லை. இது இந்தியாவின் ஸ்பெக்கில், ஆஸ்பயர்/ஃபிகோ காரில் இடம் பெறும். மெக்கானிக்கலை பொருத்தவரை, தென் ஆப்பரிக்க பிகோ கார்கள் 1.5 லிட்டர் டிராகன் பெட்ரோல் இன்ஜின் கொண்டிருந்தது. இந்த இன்ஜின் எக்கோஸ்போர்ட் போன்ற டிசைனில் இருந்தது. இந்தியாவில் வெளியாக உள்ள கார்களில், 1.2 லிட்டர் டிராகன் மோட்டார் கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 96PS/120Nm ஆற்றலை கொண்டிருக்கும்.

டீசல் வகை கார்கள், 1.5 லிட்டர் 100PS/215Nm மோட்டாரை கொண்டிருக்கும். ஃபிகோ / ஆஸ்பயர் இரட்டை கார்கள் ஃபோர்டு நிறுவனத்தின் வெற்றிகரமான கார்களாக இருக்கவில்லை. தற்போது செய்யப்பட்டுள்ள மேம்பாடுகள், இந்த காரை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா அமேஸ் கார்களுடன் போட்டியிட வைக்கும்.

Exit mobile version