இந்தியாவின் முதன்மையான மாருதி சுசூகி நிறுவனத்தின் , பிரபலமான செலிரியோ மற்றும் செலிரியோ எக்ஸ் காரில் ஏபிஎஸ் பிரேக் உட்பட இருக்கை பட்டை அணிவதற்கான அறிவிப்பு உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை பெற்றதாக வந்துள்ளது.
மாருதி செலிரியோ காரின் விலை ரூ. 4.31 லட்சம் முதல் ரூ. 5.48 லட்சம் வரையிலான விலையிலும், செலிரியோ எக்ஸ் காரின் விலை தற்போது ரூ. 4.80 லட்சம் முதல் ரூ. 5.57 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரும் மாதங்களில் அடிப்படை அம்சமாக இணைக்க உத்தரவிடப்பட்டுள்ள இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக், ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான சீட் பெல்ட் அணிவதற்கான அறிவிப்பு, ஆகியவற்றுடன் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், மற்றும் ஓட்டுநருக்கான காற்றுப்பை போன்றவை நிரந்தர அம்சமாக இரு மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது.
செலிரியோவின் இரு மாடல்களிலும் பொதுவாக 68 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் என்ஜின் பெற்று 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரு தேர்வுகளில் கிடைக்கின்றது.
சமீபத்தில், இந்நிறுவனம் 35 ஆண்டுகால மாருதி ஆம்னி வேன் மாடலின் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இதற்கு மாற்றாக சமீபத்தில் மாருதி ஈக்கோ வேனில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளை வழங்கியிருந்தது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…
அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…
5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…
இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…