Automobile Tamilan

400 கிமீ ரேஞ்சு.., மெர்சிடிஸ் EQC EV எஸ்யூவி ஏப்ரல் 2020-ல் விற்பனைக்கு வெளியாகிறது

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் மின்சார கார் EQ பெயரில் முதல் எஸ்யூவி மாடலாக EQC ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வெளியாகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இக்யூசி எஸ்யூவி விலை ரூ.1.50 கோடியில் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பரவலாக இந்திய சந்தையில் மின்சார பைக், கார் மீதான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் 10 லட்சம் ரூபாய் முதல் தொடங்குகின்ற மின் கார்களில், அடுத்த ஆடம்பர கார் பிரியர்களுக்காக மெர்சிடிஸ்-பென்ஸ், ஆடி இ-ட்ரான் மற்றும் ஜாகுவார் ஐ-பேஸ் போன்ற கார்கள் அடுத்த சில மாதங்களுக்குள் நம் நாட்டில் எதிர்பார்க்கலாம். பென்ஸ் EQC மாடலை பொறுத்த வரை இங்கே முற்றிலும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

5 இருக்கை கொண்ட மாடலாக மெர்சிடிஸ்-பென்ஸ் இ.க்யூ.சி மின்சார காரில் இரட்டை மின்சார மோட்டார் (முன் வீல் மற்றும் பின்புற வீல் என இரண்டிலும் தலா ஒரு மோட்டார்) பொருத்தப்பட்டு ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற்று சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 400 கிமீ தொலைவு பயணிக்கும் வரம்புடன் வரவுள்ள உள்ள இக்யூசி காரில் 80kWh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு  407hp பவர் மற்றும் 765Nm டார்க் வெளிப்படுத்துவதுடன், இந்த மாடலில் உள்ள ஸ்போர்ட்ஸ் மோட் மூலம் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்க்கு 5.1 விநாடிகளும், உச்சபட்ச வேகம் மணிக்கு 180 கிமீ ஆக உள்ளது.

Exit mobile version