Automobile Tamilan

விரைவில்.., அல்ட்ரோஸ் காருக்கு முன்பதிவை துவங்கும் டாடா மோட்டார்ஸ்

tata altroz

2020 ஜனவரி மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் காருக்கான முன்பதிவு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. மேலும் அல்ட்ரோஸ் காரின் பல்வேறு முக்கிய விபரங்களும் வெளியாக உள்ளது.

கடந்த ஜூலை 2019 விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிஎஸ்6 மற்றும் சந்தையின் சூழ்நிலை காரணமாக விற்பனையை ஜனவரி 2020க்கு இந்நிறுவனம் மாற்றியது. டாடாவின் புனே ஆலையில் இந்த புதிய காருக்கான உற்பத்தி சமீபத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு மொழியான இம்பேக்ட் டிசைன் 2.0 அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது மாடலாக அல்ட்ரோஸ் விளங்குகின்றது. இந்த காரில் டாடாவின் பாரம்பரிய கிரில் அமைப்புடன் மிக நேர்த்தியான தோற்ற பொலிவு இளைய தலைமுறையினருக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

ஜெனீவாவில் காட்சிப்படுத்தப்பட்ட மாடல் 3,988 மிமீ நீளம், 1,754 மிமீ அகலம் மற்றும் 1,505 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 2,501 மிமீ கொண்டிருந்தது. மேலும், 341 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ஸ்பேஸ் உடன் எதிர்பார்க்கலாம்.

டாடா ஆல்ஃபா பிளாட்பாரத்தில் (Tata’s ALFA architecture) வடிவமைக்கப்பட்டிருக்கின்ற இந்த பிளாட்ஃபாரம் பெட்ரோல், டீசல் மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்கு ஏற்றதாகவும், செடான் , எஸ்யூவி போன்ற மாற்று ரக மாடல்களையும் உருவாக்க இயலும். இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என விற்பனைக்கு வரவுள்ளது.

டாடாவின் அல்ட்ரோஸ் காருக்கு போட்டியாக மாருதி பலேனோ, டொயோட்டா கிளான்ஸா, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற கார்கள் விளங்கும். ரூ.5 முதல் ரூ.8 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாக வாய்ப்புகள் உள்ளது. மேலும், இந்நிறுவனம் சமீபத்தில் 7 இருக்கை பெற்ற டாடா கிராவிட்டாஸ் காரின் முதல் டீசரை வெளியிட்டுள்ளது.

Exit mobile version