Site icon Automobile Tamil

டொயோட்டோ எட்டியோஸ் 4 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்து சாதனை படைத்தது

டொயோட்டோ இந்தியா நிறுவனம், தனது புதிய எட்டியோஸ் சீரிஸ் கார்களின் விற்பனையில், புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் இந்த நிறுவனம் 4 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. எட்டியோஸ் சீரிஸ்கள், பிளாட்டினம் எட்டியோஸ், எட்டியோஸ் லீவா மற்றும் எட்டியோஸ் கிராஸ்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்தாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதங்களில் எட்டியோஸ் லீவா கார்களின் விற்பனை கடந்த ஆண்டில் இதே காலகட்ட விற்பனையை ஒப்பிடும் போது, 10 சதவிகதம் அதிகரித்துள்ளது.

டொயோட்டோ எட்டியோஸ் முதன் முதலாக கடந்த 2011ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. பிளாட்டினம் எட்டியோஸ், எட்டியோஸ் லீவா கார்கள் 2016ம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் டொயோட்டோ நிறுவனம், லீவா டூயல் டோன் லிமிடெட் எடிசனை இந்தியா முழுவதும் வெளியிட்டது.

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான இந்த நிறுவனம், லீவா டூயல் டோன் லிமிடெட் எடிசனை இந்தியாவில் அறிமுகம் செய்தது, டொயோட்டோ நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்க உதவியது. எட்டியோஸ் கிராஸ்கள் என்று அழைக்கப்படும் எட்டியோஸ் X எடிசன்குள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

எட்டியோஸ் சீரிஸ்கள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி SRS ஏர்பேக்ஸ் மற்றும் EBD உடன் கூ’டிய ABSகளும் பொருத்தப்பட்டுள்ளது. பிராண்ட்சீட் பெல்ட்களுடன் பிரி டென்சிநேர் & போர்ஸ் லிமிட்டர், Isofix குழந்தைகளுக்கான சீட் லாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எட்டியோஸ், குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட் ரேட்டிங்கில் நான்கு ஸ்டார்களை பெற்றுள்ளது.

Exit mobile version