மஹிந்திரா ஃபோர்டு கூட்டணி
இந்தியாவில் மிகச் சிறப்பான வகையில் பல்வேறு விதமான சேவைகள் நாடு முழுவதும் வழங்கி வருகின்ற இந்நிறுவனத்துடன், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் சிறப்பான பங்களிப்பை பெற்றுள்ள ஃபோர்டு நிறுவனத்தின் சேவைகளை மஹிந்திரா பயன்படுத்திக் கொள்ளவும், மஹிந்திரா வாயிலாக இந்தியாவில் ஃபோர்டு சேவைகளை விரிவுப்படுத்துவதே இந்த கூட்டணியின் முக்கிய நோக்கமாகும்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி , மேலும் நீட்டிக்கப்படுவது குறித்து மூன்று ஆண்டுகள் நிறைவடையும் போது அறிவிக்கப்படலாம்.
இந்த கூட்டணியின் நோக்கங்கள் பின்வருமாறு ;-
1. மின்சார கார் துறை
2. வாகனத்தின் கனெக்டேட் நுட்பம்
3. மொபைலிட்டி ப்ரோகிராம்
4. ஃபோர்டு சேவைகள் இந்தியாவில் அதிகரிக்கவும்
5. மஹிந்திரா சேவைகள் சர்வதேச அளவில் அதிகரிக்கவும்
6. புதிய மாடல்கள் உருவாக்குவதற்கு மற்றும்
7. வணிகரீதியான மற்றும் வளம் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளப்படும்.
மஹிந்திரா நிறுவனம் மின்சார கார் துறையில் சந்தை மதிப்பை பெற்ற இந்தியாவின் ஒரே நிறுவனமாக விளங்கும் நிலையில், இதுனுடைய பொருட்களை சர்வதேச அளவில் விரிவுப்படுத்தவும், இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கவும் மஹிந்திராவை பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.