வரும் ஆண்­டு­களில், உல­கில் 27 சத­வீ­தம் வாகனங்கள் இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்படும் நிலை உருவாகும் என்பதனால் இந்திய உலக வாகன மையமாக திகழும் என மத்­திய உருக்கு துறை அமைச்­சர் சவுத்ரி பிரேந்­தர் சிங் கூறியுள்ளார்.

உலக வாகன மையம்

அடுத்த சில வருடங்களில், உல­கின் ஆட்டோ மைய­மாக இந்­தியா உரு­வெ­டுக்­கும் சூழல் உருவாக வுள்ளதால் உயர்­த­ரத்­தில் உருக்கு பொருட்­களை தயா­ரிக்க வேண்­டிய நிலைக்கு தயாராக உருக்கு நிறுவனங்கள் விளங்க வேண்டும் என மத்­திய உருக்கு துறை அமைச்­சர் சவுத்ரி பிரேந்­தர் சிங்  குறிப்பிட்டுள்ளார்.

வரும் ஆண்­டு­களில், உல­கில் உற்­பத்­தி­யா­கும் வாக­னங்­களில், 27 சத­வீ­தம் இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­படும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.அதற்­கேற்ப, இந்­தியா, உயர்­த­ரத்­தில் உருக்கு பொருட்­களை தயா­ரிக்க வேண்­டும். தற்­போது, இந்­தி­யா­வின் உருக்கு, சர்­வ­தேச தரத்­திற்கு குறை­வா­கவே உள்­ளது.

ஆகவே, பொது மற்­றும் தனி­யார் துறை நிறு­வ­னங்­கள், சர்­வ­தேச தரத்­திற்கு நிக­ராக, உருக்கு தயா­ரிக்க வேண்­டும். இவ்­வகை உருக்கை ஏற்­று­மதி செய்­வ­தன் மூலம், அன்­னிய செலா­வ­ணியை மிச்சப்படுத்தலாம். பொதுத் துறை­யைச் சேர்ந்த, செயில் நிறு­வ­னத்­தின் கீழ், சேலம், பிலாய், ரூர்­கேலா உள்­ளிட்ட உருக்­கா­லை­களை விரி­வாக்­கம் செய்து, நவீ­ன­ம­ய­மாக்க, கடந்த, 8 – 10 ஆண்­டு­களில், 62 ஆயி­ரம் கோடி ரூபாய் செல­வி­டப்­பட்டு உள்­ளது. இதன் மூலம், கச்சா உருக்கு உற்­பத்தி, 1.28 கோடி டன்­னில் இருந்து, 2.14 கோடி டன்­னாக அதி­க­ரித்­துள்­ளதாக கூறினார்.