இந்தியாவில் டொயோட்டா கார்கள் விலை உயரக்கூடும்

இந்திய மோட்டார் வாகன சந்தையில் டொயோட்டா கிரிலோஸ்கர் இந்தியா நிறுவனம், ரூ.5.49 லட்சம் முதல் ரூ.1.41 கோடி வரையிலான விலையில் கார்கள் மற்றும் உயர் ரக எஸ்யூவி மாடல்களை டொயோட்டா விற்பனை செய்து வருகின்றது.

டொயோட்டா கார்கள்

இந்தியாவின் நான்கு சக்கர வாகன சந்தையில் மிக சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகின்ற டொயோட்டா இந்தியா நிறுவனம் அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளை ஈடுகட்டும் நோக்கில், விலை உயர்வை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளோம் ஆனால் தற்போது வரை விலை உயர்த்தவில்லை என்றாலும், அடுத்த மாதவாக்கில் விலை உயர்வை தவிர்க்க இயலாது என டொயோட்டா நிறுவனத்தின் துனை நிர்வாக இயக்குநர் என். ராஜா பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நடப்பு நிதி ஆண்டில் ஒட்டுமொத்த வளர்ச்சி 8-9 சதவீதமாக இருக்கலாம், இதே அளவிலான வளர்ச்சியை டொயோட்டா நிறுவனமும் பதிவு செய்ய வாய்ப்புள்ளது. மேலும் ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களின் விற்பனை நடந்து முடிந்த நிதி ஆண்டை விட கூடுதலான வளர்ச்சி அடையலாம் என குறிப்பிட்டுள்ளார்.

டொயோட்டா நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் டொயோட்டா யாரீஸ் செடான் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Exit mobile version