இன்று முதல் அதாவது ஏப்ரல் 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய பி.எஸ் 4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறையை தொடர்ந்து வர்த்தக வாகனங்களின் விலை 6 முதல் 10 சதவிதம் வரை உயருகின்றது.
வர்த்தக வாகனங்கள்
- ஏப்ரல் 1ந் தேதி முதல் பி.எஸ் 4 நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
- உச்சநீத மன்றம் விதித்த தடை தொடர்ந்து பி.எஸ் 3 வாகனங்கள் விற்பனை நிறுத்தம்
- அரை டன் முதல் 49 டன் வரையிலான வனிக ரீதியான வாகனங்கள் விலை உயர்வை சந்திக்கும்.
பி.எஸ் 4 எஞ்சின்களை பெற்ற இரு சக்கர வாகனங்கள் விலை ரூ.500 முதல் ரூ.1000 வரை தொடக்கநிலை சந்தை மாடல்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அரை டன் முதல் 49 டன் வரையிலான வர்த்தக ரீதியான பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் அனைத்தும் விலை 6 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மாதம் 60,000த்திற்கு மேற்பட்ட வர்த்தக வாகனங்கள் இந்தியளவில் விற்பனை செய்யப்படுகின்றதாக விற்பனை அறிக்கை தெரிவிக்கின்றது.