Automobile Tamilan

மஹிந்திரா கார்கள் விலை உயர்வு – மத்திய பட்ஜெட்

மஹிந்திரா  கார் நிறுவனம் தன்னுடைய கார்களின் விலை மத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட கூடுதல் வரி உயர்வினால் விலையை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.

mahindra-xuv500

கேயூவி100 முதல் XUV500 வரையிலான அனைத்து மாடல்களும் இந்த விலை உயர்வினை சந்தித்துள்ளன. 1 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரையிலான விலை உயர்வினை பெற்றுள்ளது. குறிப்பாக புதிய கேயூவி100 காரும் இந்த வரி உயர்வினை பெற்றுள்ளது.

சுமார் ரூ. 5500 முதல் ரூ.47,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கபட்ட பெட்ரோல் கார்களுக்கு 1 சதவீத கூடுதல் வரி மற்றும எஸ்யூவி கார்களுக்கு 2.5 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள கேயூவி100 மினி எஸ்யூவி கார் இதுவரை 21,000 முன்பதிவுகளை கடந்துள்ளது. மேலும் காத்திருப்பு காலம் 3 மாதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. காத்திருப்பு காலத்தினை குறைக்கும் வகையில் உற்பத்தியை அதிகரிக்க மஹிந்திரா திட்டுமிட்டு வருகின்றன. அனைத்து கார் நிறுவனங்களுமே தனது கார் மாடல்களின் விலை உயர்த்த தொடங்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு மத்திய பட்ஜெட் கூடுதல் சுமையாகியுள்ளது.

 

Exit mobile version