Site icon Automobile Tamilan

புதிய டஸ்டர்களை திருடிய ரெனால்ட் நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலை ஊழியர்கள்

ரெனால்ட் நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையில் பணியாற்றி வரும் இரண்டு ஊழியர்கள், இரண்டு டஸ்டர் கார்களை திருடியுள்ளனர். இந்த திருட்டு ஒரு திரில்லர் திரைப்படத்தில் வரும் காட்சி போன்று நடந்துள்ளது. கார்களை திருட திட்டமிட்ட அவர்கள், புதிய கார்களை எந்த தடங்கலும் இன்றி ஒட்டி செல்ல முடிவு செய்தனர்.

தொழிற்சாலை வளாகத்திற்குள் போலியான கேட் பாஸ் மூலம் உள்ளே நுழைந்த அவர்கள், இரண்டு பழைய கார்களின் நம்பர் பிளேட்களை புதிய கார்களில் மாட்டி, திருடியுள்ளனர்.

இவர்கள் இருவரும் கார்களில் மெக்கனிக்கல் பிரச்சினைகளை சோதனை செய்யும் பொறுப்பில் இருந்ததால், எளிதாக புதிய வாகனங்களை அருகில் சென்றுள்ளனர். அங்கு புதிய கார்களை எடுத்து சென்று ஊழியர்கள் கார் பார்க்கிங் செய்யும் இடத்தில் நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஜனவரி 22, 2018-க்கான கார்களை காணவில்லை என்பதை அறிந்த அதிகாரிகள், போலீசில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், காரை திருடியவர்களை கைது செய்தனர். இந்த நிறுவனத்தில் ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வந்த அவர்கள், தங்கள் திருடிய காரை ஆறு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Exit mobile version