Site icon Automobile Tamilan

லைசென்ஸ் பெற்ற மையங்களில் மட்டுமே பழைய வாகனங்கள் அகற்றப்பட வேண்டும்

15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் அனைத்தும் லைசென்ஸ் பெற்ற மையங்களில் மட்டுமே பழைய வாகனங்கள் அகற்றப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதிய விதிகள் அடங்கிய ‘Guidelines for Scrapping of Motor Vehicles in Delhi, 2018’ என்ற கையேட்டை டெல்லி அரசு வெளியிட்ட உள்ளது.

இந்த புதிய விதிமுறைகளில் முக்கிய நோக்கமே, பழைய வாகனங்கள் அகற்றப்படும் போது ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதேயாகும். இந்த புதிய விதிமுறைகள், சாலைய்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட வாகனங்களை, பெரியளவில், சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அகற்ற பணிகளுக்கு உதவும்.

இந்த விதிகளின் படி, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள், சாலையில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட வாகனங்களை அமலாக்கத்துறை மூலம் கைபற்றி, போக்குவரத்து துறையில் லைசென்ஸ் பெற்ற ஸ்கிராப்பர்களிடம் ஒப்படைக்கப்படும். காரின் உரிமையாளர்களிடம் இருந்தே இந்த காரை அகற்ற ஆகும் செலவும் வசூல் செய்யப்படும்.

15 ஆண்டு பலியாய பெட்ரோல் அல்லது CNG-ல் இயக்கப்படும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டால், அவர்கள் அந்த வாகனங்களை பொது இடங்களிலோ அல்லது பார்க்கிங் இடங்களிலோ நிறுத்தி வைக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version