Site icon Automobile Tamilan

2020-க்குள் 5 ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்ய கவாசாக்கி திட்டம்

உயர்தரம் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு ஏற்பட்டுள்ள டிமாண்டை பூர்த்தி செய்ய கவாசாக்கி நிறுவனம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது விற்பனையை மூன்று மடங்காக உயர்த்த, அதாவது 5 ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டில் இந்த நிறுவனம் 1,400 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்நிலையில், குறைந்த விலையில் உதரி பாகங்கள் மற்றும் குறைந்த சம்பளத்தில் வேலையாட்கள் கிடைப்பதால், தனது சகான் தொழிற்சாலையில் இருந்து, மார்க்கெட்டில் பெரியளவிலான இறக்குமதியை செய்ய இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது தவிர ஜப்பானில் உள்ள கவாசாகி கனரக தொழிற்சாலைகளின் துணை நிறுவனமும், அதன் டீலர் நெட்வொர்க்கை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. தற்போது இந்த நிறுவனம் 30 அவுட்லெட்களை கொண்டுள்ளது.

தங்கள் விற்பனை திட்டம் குறித்து பேசிய கவாசாக்கி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் சேல்ஸ்/மார்க்கேத்டிங்க்க் பிரிவு ரீஜினல் மேனேஜர் பி. சுசீல் குமார் பேசுகையில், வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் 5,000 யூனிட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். நாங்கள் கடினமான விற்பனை இலக்கை கொண்டிருந்த போதும், மலிவான பொருட்களை பயன்படுத்துவதில்லை என்று கூறினார். மேலும், அவர் பேசுகையில், அதிகரித்து வரும் மார்க்கெட் தேவையை கொண்ட இந்தியாவை வாகன ஏற்றுமதி மையமாக வைத்திருப்பதையே நிறுவனத்தின் குளோபல் மேனேஜ்மென்ட் விரும்புகிறது என்றார்.

ரியர் ஆன்டி லாக் ப்ரோகிங் சிஸ்டம் கொண்ட நிஞ்ஜா 300 பைக்கை, 2.98 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்துள்ளது குறித்து பேசிய இந்திய காசாக்கி மோட்டார்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் யூட்டா யமஷிடா தெரிவிக்கையில், மலிவு விலையில் கிடைப்பதால் இந்த பைக், எங்கள் நிறுவனத்தின் சிறந்த விற்பனையாகும் பைக்காக நிஞ்ஜா 300 பைக் விளங்கி வருகிறது.

இந்திய காசாக்கி மோட்டார்ஸ் நிறுவனம், பஜாஜ் ஆட்சோ நிறுவனத்துடன் இணைந்தது கடந்த ஆண்டு சகான் தயாரிப்பு ஆலையை தொடங்கியது. இந்த தயாரிப்பு ஆலையில், நிறுவனத்திற்காக பைக்குகள் அசம்பிள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆலையில், நிஞ்ஜா 300, 650, இசட் 250, 650, வெர்சி-எக்ஸ் 300, 650 & வல்கன் எஸ், நிஞ்ஜா 1,000, இசட் எக்ஸ்-10ஆர் மற்றும் இசட் எக்ஸ்-10 ஆர்ஆர் போன்ற பைக்குகள் அசம்பில் செய்யப்படுகிறது.

Exit mobile version