Site icon Automobile Tamilan

நிறுத்தப்பட்டது ஹோண்டா பிரியோ

ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா நிறுவனம் தனது  பிரியோ கார்களை 2011ம் ஆண்டில் அறிமுகம் செய்தது. இந்த கார்கள் விற்பனையில் பெரியளவில் சாதிக்கவில்லை. இந்த சிறிய ரக கார்களால் மார்க்கெட்டில் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இந்த கார்கள் விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 120 யூனிட்களையும் செப்டம்பர் மாதத்தில் 102 யூனிட்களும் தயாரிக்கப்பட்டது. இரண்டு மாதத்தின் விற்பனை முறையே 157 மற்றும் 64 யூனிட்களாக இருந்துள்ளது. இதை தொடர்ந்து இந்த கார்களின் தயாரிப்பை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி ஹோண்டா கார்கள், அமோசாஸ் மற்றும் WR-V கிராஸ் ஓவர்-கள் இதே பிரியோ கார்களுக்கான பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார்கள் மார்க்கெட்டில் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. பிரியோ கார்களை தொடர்ந்து, அடுத்த தலைமுறை கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படமாட்டாது என்று ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version