Site icon Automobile Tamilan

இந்தியா முழுவதும் மாருதி சுஸுகி சியாஸ் முன்பதிவு தொடங்கியது

மாருதி சுஸுகி சியாஸ் கார்கள் இந்தியாவில் வரும் 20ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார் அறிமுகம் செய்வதற்கு முன்பு இந்த காருக்கான முன்பதிவு தொடங்கியது. வாடிக்கையாளர்கள் இந்த காரை ரூ.10,000 மற்றும் ரூ. 25,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் புதிய கிரில், அப்டேட்டட் ஷார்ப்பான ஹெட்லைட்கள் இத்துடன் புரொஜக்டர் யூனிட் மற்றும் மேம்படுத்தப்பட்ட LED டேடைம் ரன்னிங் லைட்கள், மாற்றப்பட்ட பிராண்ட் பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. காரின் ப்ககவாட்டை பொறுத்தவரையில், புதிய டிசைன் அலாய் வீல், சிலிக் கேரக்டர் லைன் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது. பின்புறத்தில், டைல்லைட்கள் மற்றும் LED லைட்களுக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

காரின் வெளிப்புறம், அதிக ஸ்டைலாகவும், உள்புறம் இதற்கு முன்பு வெளியான மாடல்களை விட சிறப்பாகவும் இருக்கும். டுயல்-டோன் பிரீமியம் கலரில் வெளியாக உள்ள இந்த கார்கள், மார்க்கெட்டில் பெரியளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, பாக்ஸ்வுட்டன் டிரிம், அனலாக் டிஜிட்டல் காம்போ இன்ஸ்டுர்மென்ட் கிளச்சர், மத்திய பகுதியில் பெரியளவிலான MID பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பெரிய டச்ஸ்கிரின் இன்போடெயன்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ ஆகியவை இடம் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு நவீன பாதுகாப்பு வசதிகளையும் கொண்டுள்ளது.

இந்த காரில் 1.5 லிட்டர் K15B VT பெட்ரோல் இன்ஜின் இத்துடன் பிராண்டின் SHVS மைல்ட் ஹைபிரிட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜின் 103bhp அதிக பட்ச ஆற்றல் மற்றும் 138Nm உச்சகட்ட டார்க்கியூ இயங்கும். டீசல் இன்ஜின்கள் 5-ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் ஆட்டோமேட்டிக் யூனிட்டும் பொருத்தப்பட்டுள்ளது.

Exit mobile version