Site icon Automobile Tamilan

பாஷ் நிறுவனம் திருநெல்வேலியில் புதிய ஆலையை தொடங்கியுள்ளது

பாஷ் நிறுவனம் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் உதரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமாகும். திருநெல்வேலியில் உள்ள கங்கைகொண்டான் தொழிற்பேட்டையில் தற்பொழுது புதிய ஆலையை தொடங்கியுள்ளது.
e00db bosch2blogo

இந்தியாவில் 5 உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களை பாஷ் நிறுவனம் கொண்டுள்ளது. தற்பொழுது 6வது ஆலையை தொடங்கியுள்ளது. சுமார் 500 மில்லியன் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள ஆலை 6500 சதுர அடி கொண்டதாகும்.

இந்த ஆலையில் பவர்டெரியன் சென்சார்கள், எரிபொருள் தெளிப்பான், என்ஜின் காற்று நிர்வாக அமைப்பு போன்றவற்றை தயாரிக்க உள்ளனர்.

புதிய ஆலையின் மூலம் விரைவாகவும் குறைவான விலையிலும் வாடிக்கையாளர்களின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு திருநெல்வேலியில் தொடங்கியுள்ளனர்.

Exit mobile version