பிரபலமான மஹிந்திரா பொலிரோ காரில் ஏபிஎஸ் பிரேக் இணைப்பு

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி

மிகவும் பிரபலமான மஹிந்திரா பொலிரோ காரில் ஜூலை 1,2019 முதல் நடைமுறைக்கு வந்த AIS-145 பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்ட அம்சங்களை மஹிந்திரா நிறுவனம் இணைத்துள்ளது. மேலும் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் மற்றும் பொலிரோ பிளஸ் மாடல்கள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் ஜூலை 1, 2019 முதல் நடைமுறைக்கு வந்துள்ள பயணிகள் வாகனங்களுக்கான AIS-145 பாதுகாப்பு அம்சத்திற்கு ஏற்ப நிரந்தர அம்சமாக ஏர்பேக், ஸ்பீடு அலெர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், இருக்கை பட்டை நினைவூட்டல் போன்ற வசதிகள் கட்டாயமாகும்.

பொலிரோ பவர் பிளஸ் மாடலில் தொடர்ந்து 71 ஹெச்பி பவர் மற்றும் 195 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மற்றொரு மாடாலான 2.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இது அதிகபட்சமாக 63 பிஎச்பி பவரையும், 195 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜினை சார்ந்த வேரியண்டுகள் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

தற்போது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை பெற்ற மாடலுக்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. எனவே, புதிய மஹிந்திரா பொலிரோ காரின் ஆரம்ப விலை ரூ.7.68 லட்சம் முதல் தொடங் உள்ளது.

மஹிதிராவின் அதிகம் விற்பனையாகின்ற மாடல்களில் தொடர்ந்து பொலிரோ எஸ்யூவி முன்னிலை வகித்து வருகின்றது.

Exit mobile version