மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சொகுசு கார் பிரிவில் முன்னிலை நிறுவனமாகும். தனது போட்டியாளர்களான ஆடி, பிஎம்டபிள்யூ, ஜெஎல்ஆர்(ஜாகுவார் லேண்ட் ரோவர்) போன்ற நிறுவனங்களை சமாளிக்க இந்த வருடத்திற்க்குள் 5 மாடல்களை இந்தியாவில் களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இளம் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு 2013க்குள் வரப்போகும் 5 மாடல்கள் பி-கிளாஸ் டீசல், புதிய ஏ-கிளாஸ், ஜிஎல்-கிளாஸ் இந்த மூன்று இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரும். மேலும் ஜிஎல்ஏ எஸ்யூவி மற்றும் சிஎல்ஏ கூப் கார்கள் இந்த வருடத்திற்க்குள் விற்பனைக்கு வரும்.இந்தியாவிலே கார்களை கட்டமைக்கவும் திட்டமிட்டுள்ளதாம். ஆனால் எந்த வகையான மாடல் என்பதற்க்கான உறுதியான தகவல் இல்லை.வருகிற மே 16ல் மேம்படுத்தப்பட்ட ஜிஎல்-கிளாஸ் விற்பனைக்கு வருகின்றது.
Author: MR.Durai
ஹோண்டா சிபி டிரிகர் 150சிசி பைக் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. சிபி டிரிகர் அறிமுகத்தின் பொழுது விலை விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. தற்பொழுது சிபி டிரிக்கர் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.ஹோண்டா சிபி டிரிகர் 150சிசி 4 ஸ்டோர்க் ,149.1 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு எஞ்சின் பொருதப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 14.41 எச்பி @ 8500rpm வரை வெளிப்படுத்தும். மற்றும் டார்க் 12.5என்எம் @ 6500rpm ஆகும்.ஹோண்டா சிபி டிரிகர் 150சிசி பைக் மைலேஜ் லிட்டருக்கு 60 கிமீ ஆகும்.பல்சர் 150 , யமாஹா எஃப்-இசட் எஸ், அப்பாச்சி 160 பைக்களுக்கு சிபி டிரிகர் 150 சவாலினை ஏற்படுத்தும்.ஹோண்டா சிபி டிரிகர் பைக் விலை ரூ 67,384 ஆகும்.(தில்லி எகஸ்ஷோரூம்)சிபி டிரிகர் பைக் இந்த மாதம் முதல் டீலர்களிடம் கிடைக்கும்.ஹோண்டா சிபி டிரிகர் முழுமையான விவரம் அறிய கீழே சொடுக்கவும்.ஹோண்டா சிபி டிரிக்கர் பைக்
ஜாகுவார் நிறுவனம் இந்தியாவில் ஜாகுவார் எஃப்-டைப் காரினை வருகிற ஜூலை மாதம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. ஜாகுவார் எஃப்-டைப் கார் இரண்டு விதமான மாறுபட்டவையில் விற்பனைக்கு வரும். இந்தியாவில் ஜாகுவார் எஃப்-டைப் காரின் விலை ரூ 1.2 கோடி முதல் ரூ 1.4 கோடிக்குள் இருக்கலாம்.2013 ஆம் ஆண்டிற்க்கான சிறந்த வடிவமைப்புக்கான விருதினை ஜாகுவார் எஃப்-டைப் கார் வென்றுள்ளதை முன்பே பதிவிட்டிருந்தேன். முழுமையான கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுவதனால் 100 சதவீத வரியினால் விலை அதிகமாகத்தான் இருக்கும்.இரண்டு விதமான வேரியண்டில் வெளிவரும் . அவை வி6 எஸ் மற்றும் வி8 எஸ் ஆகும்.ஜாகுவார் எஃப்-டைப் வி6 எஸ்வி6 எஸ் மாறுபட்டவையில் 3.0 லிட்டர் சூப்பர்சாரஜ்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் அதிகபட்ச ஆற்றல் 380பிஎஸ் ஆகும். 8 ஸ்பீடு தானியிங்கி கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வேகம் எலெக்ட்ரானிக் முறை மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 275கிமீ ஆகும். 0-100 கிமீ வேகத்தை 4.9 விநாடிகளில்…
செவர்லே என்ஜாய் வருகிற மே 9யில் விற்பனைக்கு வரவுள்ளது. செவர்லே என்ஜாய் எம்பிவி கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வரும்.செவர்லே என்ஜாய் பெட்ரோல் கார்செவர்லே என்ஜாய் காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 104 பிஎஸ் ஆகும் மற்றும் டார்க் 131 என்எம் ஆகும்.செவர்லே என்ஜாய் டீசல் கார் செவர்லே என்ஜாய் காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.இதன் ஆற்றல் 77.5 பிஎஸ் ஆகும் மற்றும் டார்க் 188 என்எம் ஆகும்.7 மற்றும் 8 நபர்கள் என இரண்டு விதமான இருக்கை வசதிகள் இருக்கும்.இன்னோவோ, சைலோ, மாருதி எர்டிகா, எவாலியா போன்ற கார்களுக்கு கடும் சவாலினை ஏற்ப்படுத்தும்.செவர்லே என்ஜாய் எதிர்பார்க்கப்படும் விலை ரூ 6 முதல் 9 லட்சம் வரை இருக்கலாம்.
லேண்ட்ரோவர் நிறுவனம் இங்கிலாந்தினை தலைமையிடமாக கொண்டு 1948 ஆம் ஆண்டு தொடங்கபட்டது. நேற்றுடன் (ஏப்ரல் 30) லேண்ட்ரோவர் 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.லேண்டரோவர் கடந்த 2008 முதல் டாடா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றது. ஹியூ 166 (HUE 166)என்ற பெயரில் கேக் வைத்து கொண்டாடியுள்ளது. லேண்ட் ரோவர் 1 சீரிஸ் காரினை நினைவுப்படுத்தும் வகையில் இந்த பெயரினை வைத்துள்ளது.இந்த கேக் ராயல் நேவியின் லினஸ் ஹெலிக்பட்டரில் கொண்டு வரப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் காட்சி வைக்கப்பட்டிருந்தது.65வது கொண்டாட்டத்தை இந்தியாவிலும் கொண்டாட உள்ளது. இதற்க்காக வருகிற மே 3யில் ஆம்பி வேலியில் லேண்ட்ரோவர் எக்ஸ்பிரியன்ஸ் நிகழ்வினை நடத்த உள்ளது. இந்த நிகழ்வில் ஆல்-டெரரின் அனுபவத்தினை பெற முடியும்.மேலும் டிஃபென்டரில் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்டுள்ளது. டிஃபென்டர் எல்எக்ஸ்வி என்ற பெயரில் கொண்டாட்ட எடிசனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் 24 லட்சம் ஆகும்.
ராயல் என்பீல்டு நிறுவனம் சென்னை ஒரகடத்தில் புதிய ஆலையை கட்டமைத்துள்ளது. இதனால் ராயல் என்பீல்டு பைக்களுக்கான காத்திருக்கும் காலம் குறையும். ராயல் என்பீல்டு புதிய ஆலையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 1.50 லட்சம் பைக்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டிற்க்குள் 2.50 லட்சம் பைக்கள் தயாரிக்கப்படும்.ரூ.150 கோடியில் சென்னை அருகே உள்ள ஒரகடத்தில் ஐசர் நிறுவனத்தை தலைமை நிறுவனமாக கொண்டு செயல்படும் ராயல் என்பீல்டு அமைத்துள்ளது. இந்த ஆலையின் உற்பத்தி திறன் ஆண்டிற்க்கு 2.50 லட்சம் பைக் ஆகும்.இந்த ஆலையில் பெயின்டிங் முறை ஆட்டோமேட்டிக்காக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 600 மோட்டார் சைக்கிள்களை உருவாக்க முடியும். 50 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமைந்துள்ளது. தற்பொழுது டெஸர்ட் ஸ்டோர்ம் பைக் உற்பத்தி தொடங்கியுள்ளது. விரைவில் தன்டர்பேர்டு 350 மற்றும் 500 உற்பத்தி தொடங்கும்.சித்தார்த் லால் MD & CEO (Eicher Motors Ltd) கூறுகையில்..ராயல் என்ஃபீல்டு வரலாற்றில் இந்த ஆலையின் தொடக்கம் புதிய மைல்கல்லாக…