இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் நிறுவனமான ரேவா நிறுவனத்தை சில ஆண்டுகளுக்கு முன் மஹிந்திரா கைப்பற்றியது. மஹிந்திரா ரேவா நிறுவனம் புதிய e2o(ஈ2ஓ) காரினை விரைவில் வெளியிட உள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் பெங்களூரு ஆலையில் e20 கார்கள் தயாரிக்கப்பட உள்ளது. இந்தியாவிலே இந்த தொழிற்சாலைதான் ப்ளாட்டினம் சான்றிதழ் பெற்ற முதல் ஆலையாகும். வருடத்திற்க்கு 30000 கார்களை தயாரிக்கும் திறன் கொண்டது.
e2o என்றால்
e—energy of the Sun
2—-signifying the connected technologies in the car
o— Oxygen
மேலும் e2o கார்கள் 5C கான்செப்ட்டை அடிப்படையாக கொண்டது.
5C என்றால்
Clean,
Convenient,
Connected,
Clever மற்றும்
Cost Effective
e2o எலெக்ட்ரிக் கார் லித்தியம் ஐயன் பேட்டாரி மூலம் இயங்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 100km வரை பயணிக்கலாம். இதனை சார்ஜ் ஏற்ற 15 ஆம்பியர் ப்ளக் பாயின்ட் தேவைப்படும்.e2o எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுசூழலை பாதிக்காது என்பதால் அரசின் சலுகைகளும் கிடைக்கும். இந்த மாதத்தில் வெளிவரும்.