ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற ஜனவரி 1, 2025 முதல் அனைத்து மாடல்களின் விலையும் உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அதிகபட்சமாக ஒரு சில வேரியண்டுகள் ரூபாய் 25 ஆயிரம் வரை விலை உயரும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
விலை உயர்வு MY25 வருடத்தின் மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதனால் தற்பொழுது முன் பதிவு செய்பவர்களுக்கு எந்த வகையிலும் விலை உயர்வு பாதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வுக்கான காரணம் குறித்து தெரிவிக்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தயாரிப்பு மூலப் பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்து செலவுகள் மற்றும் மாறிவரும் பணவீக்க விகிதம் போன்ற பல்வேறு காரணங்களால் விலை உயர்வு தவிர்க்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளது.
ஜனவரி 2025ல் ஹூண்டாய் க்ரெட்டா இவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.