Automobile Tamil

4 எஸ்யூவி, 2 EV கார்களை தயாரிக்க ரெனோ-நிசான் 5,300 கோடி முதலீடு

இந்திய சந்தையில் ரெனோ-நிசான் (Renault Nissan Automotive India Private Ltd – RNAIPL) கூட்டு நிறுவனம் ரூபாய் 5,300 கோடி முதலீட்டில் 4 காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் 2 எலெக்ட்ரிக் கார்கள் என மொத்தமாக 6 கார்களை விற்பனைக்கு அடுத்த சில ஆண்டுகளுக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. உள்ளூரில் பெரும்பாலான உதிரிபாகங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள இந்நிறுவனம் மிக குறைந்த விலையில் கார்களை வெளியிடக்கூடும்.

ரெனோ-நிசான்

ரெனால்ட்-நிசான் நிறுவனம் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நான்கு சிறிய எஸ்யூவிகள் மற்றும் 2 சிறிய EV கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் நோக்கத்துடன் சந்தைப் பங்கை அதிகரிக்கவும் மற்றும் உலகின் ஐந்தாவது பெரிய வாகன சந்தையில் அதன் நிலையை வலுப்படுத்துவதாகும். ரெனால்ட் மற்றும் நிசான் தலா இரண்டு சிறிய எஸ்யூவிகள் மற்றும் ஒரு EV போர்ட்ஃபோலியோவை கொண்டிருக்கும்.  முதல் கார் மாடல் 2025 ஆம் ஆண்டு வெளியிடப்படும்.

நான்கு எஸ்யூவிகளும் அனைத்து-புதிய CMF-B பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்படும். இது இந்திய தேவைகளுக்காக வடிவமைக்கப்படும் மற்றும் CMF-A பிளாட்ஃபாரத்தில் மின்சார கார்கள் உருவாக்கப்படும்.

ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ஆர்என்ஐபிஎல்) முந்தைய 70:30 ஈக்விட்டி ஹோல்டிங்கிற்கு மாற்றாக புதுப்பிக்கப்பட்டு 51 சதவிகிதம் நிசான் மற்றும் 49 சதவிகிதம் ரெனால்ட்டின் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் Renault Nissan Technology Business Center (RNTBCI) 51 சதவிகிதம் ரெனால்ட் மற்றும் 49 சதவிகிதம் நிசான் என மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version