Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

பென்ட்லி நிறுவனம் ஃபிளையிங் ஸ்பர் சொகுசு காரினை ரூ.3.10 கோடி விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மிக சக்திவாய்ந்த ஃபிளையிங் ஸ்பர் சிறப்பான சொகுசு காராக உலகயளவில் விளங்குகின்றது.6 லிட்டர் ட்வீன் ட்ர்போ டபிள்யூ 12 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 616பிஎச்பி மற்றும் டார்க் 800என்எம் ஆகும். 8 வேக இசட்எஸ்எஃப் கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4 வீல் ட்ரைவ் சிஸ்டத்தினை கொண்டுள்ளது.0-100கிமீ வேகத்தினை தொட 4.6 விநாடிகளை மட்டுமே எடுத்துக்கொள்கின்றது. மேலும் உச்சக்கட்ட வேகம் மணிக்கு 322கிமீ ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 6.8கிமீ தரலாம்.8 இஞ்ச் தொடுதிரை கொண்ட தகவலமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புற பயணிகளுக்கு 10இஞ்ச் எல்சிடி தொடுதிரை கொடுக்கப்பட்டுளள்ளது. இதன் சஸ்பென்ஷன் அமைப்பு தானாகவே சாலையின் தன்மையை உணர்ந்து அதற்க்கேற்றார் போல தன்னை மாற்றிக்கொண்டு சொகுசு தன்மையை வழங்கவல்லதாகும்.4 மற்றும் 5 நபர்கள் பயணிக்கும் வகையில் இரண்டு விதமான ஃபிளையிங் ஸ்பர் விற்பனைக்கு வந்துள்ளது. பென்ட்லி ஃபிளையிங்…

Read More

ஸ்கோடா ஆக்டாவியா செடான் கார் மூன்று வருடங்களுக்கு பின் மீண்டும் லாரா காருக்கு மாற்றாக விற்பனைக்கு வந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தினை தலைமை நிறுவனமாக கொண்டு செயல்படுகிறது ஸ்கோடா நிறுவனம்.ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி பிளாட்ஃபாரத்தினை அடிப்படையாக கொண்ட புதிய ஆக்டாவியா பல சிறப்பம்சங்களை கொண்டதாக விளங்கும்.மூன்று விதமான ட்ரீம்களில் கிடைக்கும். அவை ஏக்டிவ், ஆம்பின்ட், மற்றும் எலிகன்ஸ் ஆகும். 1.4 லிட்டர் மற்றும் 1.8லிட்டர் என இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின்களில் கிடைக்கும். 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் ஆட்டோகியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.2.0 லிட்டர் டீசல் என்ஜினிலும் கிடைக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோ கியர் பாக்ஸ் என இரண்டுவிதமான வகையிலும் கிடைக்கும்.1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆற்றல் 140பிஎஸ் வெளிப்படுத்தும் மற்றும் டார்க் 250என்எம் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 16.8கிமீ ஆகும்.1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆற்றல் 180பிஎஸ் வெளிப்படுத்தும் மற்றும்…

Read More

மஹிந்திரா நிறுவனம் தனது கார்களின் தரம் மற்றும் கட்டுமானம் போன்றவற்றை மிக சிறப்பான முறையில் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய வகையில் உருவாக்குவதில் மகிந்திரா & மகிந்திரா திட்டமிட்டு வருகின்றது.ஸ்கார்பியோ விற்பனைக்கு வந்த பின்னர் மஹிந்திரா நிறுவனத்தின் வளர்ச்சி அபரிதமான முறையில் வளர்ந்து வருகின்றது. மேலும் அதிகப்பபடியான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய என்ஜினாக எம்ஹவாக் என்ஜினை மேம்படுத்த உள்ளனர். மிக சிறப்பான உட்ப்புறம் மற்றும் கட்டுமானத்தினை வடிவமைக்க திட்டமிட்டுள்ளனர்.சஸ்பென்ஷன் திறன் மற்றும் என்விஎச் போன்றவற்றை மேம்படுத்த உள்ளனர்மஹிந்திரா கார்களின் தரம் 2015 ஆம் ஆண்டிற்க்குள் மேம்படுத்தப்படுத்தப்படும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

Read More

ஹோண்டா பிரியோ காரின் 2ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை யொட்டி சிறப்பு எஸ்குளூசிவ் பதிப்பினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பிரியோ எஸ்குளூசிவ் எடிசன் எஸ்எம்டி வேரியண்டில் கிடைக்கும்.எஸ்குளூசிவ் எடிசனில் ரியர் ஸ்பாய்லர் ம்ஃபலர் ஃபினிஸிங், பின்புற சென்சார், சைட் வைசர், பக்கவாட்டு படி கார்னிஷ் போன்ற ஆக்சஸெரீஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் எஸ்களூசிவ் முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும். சிவப்பு, வெள்ளை, மற்றும் சில்வர் என மூன்று வண்ணங்களில் மட்டுமே எஸ்குளூசிவ் எடிசன் கிடைக்கும்.பிரியோ எஸ்குளூசிவ் எடிசன் விலை ரூ.4.92 லட்சம் முந்தைய எஸ்எம்டி வகையின் விலை ரூ.4.62 லட்சம் ஆகும்(எக்ஸ்ஷோரூம் டெல்லி)ஹோண்டா பிரியோ பெட்ரோல் மாடலில் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றது. இதுவரை 54,000 பிரியோ கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது.டீசல் பிரியோ கார் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.அமேஸ் மற்றும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மொபிலோ எம்பிவி கார்கள் பிரியோ காரினை அடிப்படையாக கொண்டதாகும்.

Read More

சுசூகி வேகன் ஆர் காரினை அடிப்படையாக கொண்ட பல பயன்பாட்டு வாகனத்தினை சுசூகி அறிமுகம் செய்துள்ளது. 7 இருக்கைகளை கொண்ட வேகன் ஆர் எம்பிவி 2014 ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம்.7 இருக்கைகள் கொண்ட காராக வேகன் ஆர் எம்பிவி இருக்கும். 4 மீட்டருக்கு குறைவான நீளத்திலே இந்த எம்பிவி விளங்கும். இதன் இருக்கை அமைப்புகள் 7 நபர்கள் இயல்பாக அமரக்கூடிய அளவில் இருக்கும். 3 வரிசைகள் கொண்டிருக்கும்.இந்தியாவில் 2014 ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ வெளிவரும்.

Read More

டாடா நானோ காரில் சில மாற்றங்களை செய்து டெல்லி போலீசார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அவசர சேவைப் பிரிவு வாகனமாக இணைத்துள்ளது.மிக நெரிசலான மற்றும் குறுகலான சாலைகளில் நானோ எளிதில் செல்ல வழி வகுக்கும் என்பதால் இந்த முடிவினை டெல்லி போலீசார் எடுத்துள்ளனர். இந்த வாகனத்தினை முற்றிலும் இயக்கப்போவது பெண் போலீஸ் டிரைவர்களே ஆகும்.இந்த அவசர வாகனத்தில் முதலுதவி சிகிச்சைக்கான உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும். வெள்ளை, நீளம் மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்கள் கலந்து நானோ விளங்கும். மேலும் டெல்லி போலீசாரின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.

Read More