Automobile Tamilan

ஏப்ரல் 1 முதல் கார்கள் விலை உயருகின்றது

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மாருதி சுசூகி, நிசான், டட்சன் மற்றும் ரெனோ நிறுவனங்களின் கார்கள் விலை உயருகின்றது. மேலும் பல நிறுவனங்கள் அடுத்தடுத்து விலை உயர்வை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது.

பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ஜனவரி 2021-யில் விலை உயர்த்தியிருந்த நிலையில், மீண்டும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் உள்ளீட்டு கட்டணம் உயர்வு முக்கிய காரணமாக குறிப்பிட்டுள்ளனர்.

மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்கள் மற்றும் எஸ்யூவி விலையை ரூ.5,000 முதல் ரூ.34,000 வரை அதாவது 1% முதல் 6% வரை உயர்த்த உள்ளனர்.

மேலும் நிசான், டட்சன் மற்றும் ரெனோ நிறுவனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஆனால் விலை எவ்வளவு உயர்த்தப்படும் என அறிவிக்கவில்லை.

Exit mobile version