Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஓட்டுநர் உரிமம் இல்லையா, இனி வாகனம் வாங்கவே முடியாது – தமிழக அரசு

by MR.Durai
29 August 2017, 3:58 pm
in Auto News
0
ShareTweetSend

தமிழகத்தில் விபத்துகள் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில் செப்டம்பர் 1 முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற அறிவிப்பை தொடர்ந்து லைசென்ஸ் இல்லையென்றால் வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அரசு தெரிவித்துள்ளது.

ஓட்டுநர் உரிமம்

ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது என்று போக்குவரத்து காவல்துறை கமிஷனர் அதிரடி சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். மேலும், புதிய வாகனத்தை பதிவு செய்யும் முன் வாகன உரிமையாளர்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதிக்கக்வே கூடாது என்றும் அதில் கூறி உள்ளார்.

தமிழக, போக்குவரத்து கமிஷனர் தயானந்த் கட்டாரியா, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள், சார்பு அலுவலர்களுக்கு, அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தில், இந்த ஆண்டு ஜூலை வரை, 9,231 விபத்துக்கள் நடந்து உள்ளன. அவற்றில், 9,881 பேர் உயிரிழந்துள்ளனர். 90 சதவீதத்துக்கும் அதிகமான விபத்துகள், டிரைவர்களின் கவனக்குறைவால் ஏற்படுகின்றன.

இதைக் குறைக்க மோட்டார் வாகன சட்டங்களின்படி வாகன விற்பனையாளர்கள் டிரைவிங் லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்ய கூடாது. அவ்வாறு விற்பனை செய்தால், விற்பனையாளர் குற்றவாளியாக கருதப்பட்டு, அவருக்கு சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ வழங்கப்படும். அதேபோல, புதிய வாகனத்தை பதிவு செய்யும் முன் வாகன உரிமையாளர் வாகனத்தை ஓட்டுவதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது.

மேலும், எல்.எல்.ஆர்., எனப்படும் பழகுனர் லைசென்ஸ் வைத்திருப்போர் அந்த உரிமத்தில் உள்ள வாகனத்தை மட்டுமே இயக்க அனுமதிக்க வேண்டும்.

இந்த நடைமுறைகளை கண்டிப்பாக அனைத்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும். இவற்றை வரும் செப்டம்பர் 1ந் தேதி முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இனிமேல் புதிய வாகனம் வாங்க வேண்டும் என்றால், லைசென்ஸ் எடுக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் வாகனங்கள் வைத்திருப்போர் ஒரிஜினில் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டியதும் அவசியம் என்பதனால் அனைவரும் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

Related Motor News

eVitara மூலம் எலக்ட்ரிக் சந்தையில் நுழையும் மாருதி சுசூகி

அக்டோபர் 2025ல் இந்திய கார் விற்பனையில் சாதனையை படைத்த நிறுவனங்கள்..!

7 இருக்கை XEV 9S எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதியை வெளியிட்ட மஹிந்திரா

ராயல் என்ஃபீல்டின் புல்லட் 650 ட்வீன் டீசர் வெளியானது

இந்தியாவில் 7 எஸ்யூவி உட்பட 10 கார்களை வெளியிட ஹோண்டா கார்ஸ் திட்டம்.!

ஹீரோ விடாவின் புராஜெக்ட் VXZ ஸ்போர்ட்ஸ் பைக் டீசர் வெளியானது

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டஸ்ட்டர் வெளியீட்டு தேதியை அறிவித்த ரெனால்ட் இந்தியா

டஸ்ட்டர் வெளியீட்டு தேதியை அறிவித்த ரெனால்ட் இந்தியா

டிரையம்ப் ஸ்பீடு T4

பண்டிகை காலத்தில் ரூ.16,797 வரை டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்பீடு T4 விலை குறைப்பு

வெற்றிகரமாக 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியை கடந்த ஏதெர் எனர்ஜி

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

டிவிஎஸ் மோட்டாரின் ஸ்கூட்டர் விற்பனை அசுர வளர்ச்சி

6.87 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம்

ஹோண்டா CB350C ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகமானது

ஹார்லி-டேவிட்சன், கேடிஎம், டிரையம்ப், ஏப்ரிலியா பைக்குகளுக்கு ஜிஎஸ்டி மாற்றமில்லை..!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan