Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

மாருதி ஸ்விப்ட் டிசையர் காரின் லிமிடேட் எடிசன் காரினை மாருதி டிசையர் ரீகல் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதனை ஹோண்டா அமேஸ் காருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.மாருதி டிசையர் ரீகல் காரில் உட்ப்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில மாறுதல்கள் மற்றும் வசதிகளை செய்துள்ளது. இன்ஜினில் எவ்வித மாற்றமும் இல்லை.விஎக்ஸ்ஐ பெட்ரோல் வேரியண்ட்டினை டிசையர் ரீகலாக மாற்றியுள்ளது. மேம்படுத்தப்பட்ட உட்ப்புறம், குரோம் பூச்சூ செய்யப்பட்ட முன்புற கீரில் ரியர் பார்க்கிங் சென்சார், எலக்ட்ரிக் ரியர் வியூ மிரர், பாடி கலர் மட் பிளாப், கார் பெர்ஃப்யூம், நவீன ஆடியோ அமைப்பு, லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், தரை விரிப்பு போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.மாருதி டிசையர் ரீகல் நீள வண்ணத்தில் மட்டும் கிடைக்கும்.மாருதி டிசையர் ரீகல் விலை ரூ 5.60 லட்சம் (எக்ஸ்ஷோரூம் தில்லி)ஹோண்டா அமேஸ் பற்றி வாசிக்க

Read More

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் இந்தியாவின் முதன்னையான மோட்டார் சைக்கிள் நிறுவனமாகும். ஹீரோ பைக்களுக்கு ஐந்து வருட வாரண்டி அல்லது 70000 கிமீ வாரண்டி வழங்கியுள்ளது.இந்தியாவிலே முதன் முறையாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்தான் 5 ஆண்டு வாரண்டி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும். மற்ற நிறுவனங்கள் 2 வருட வாரண்டி அல்லது 40,000 கிமீ வாரண்டி வழங்குகின்றன.ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கில் ஸ்பிளென்டர் புரோ கோல்டு எடிசனை அறிமுகம் செய்துள்ளது, தங்க எடிசனில் ஸ்பிளென்டர் பைக் தங்க நிறத்தில் இருக்கும்.

Read More

மஹிந்திரா நிறுவனத்தின் வெரிட்டோ காரினை அடிப்படையாக கொண்ட வெரிட்டோ வைப் ஹேட்ச்பேக் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.வெரிட்டோ வைப் காரின் சோதனை படங்களை ஆட்டோகார் இந்தியா வெளியிட்டுள்ளது. 4 மீட்டருக்கு குறைவான காராக வைப் விளங்கும். முன்புறத்தில் வெரிட்டோ அல்லது ரெனோ லகான் காரினை அப்படியோ கொண்டிருக்கும். இதன் பின்புறத்தில் இடவசதியானது மிக அதிகப்படியாக இருக்கும்.வெரிட்டோ வைப் காரில் ரெனோவின் கே9கே 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். வெரிட்டோ வைப் ஹேட்ச்பேக் காரில் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் வெளிவருவதற்க்கான வாய்ப்புகள் மிக குறைவு. மே மாதம் வெளிவரலாம்.வெரிட்டோ வைப் எதிர்பார்க்கப்படும் விலை ரூ 5.50 லட்சத்திற்க்கு மேல் இருக்கலாம்.thanks to autocar india

Read More

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ரேபிட் கார் வாங்குபவர்களுக்கு 100 சதவீத கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முன்பணம் இல்லாமல் ரேபிட் காரினை பெற்று செல்ல முடியும்.இந்த கடன் திட்டத்தில் ரேபிட் கார் எக்ஸ்ஷோரூம் விலையில் 100 % கடனாக காரினை பெற்று கொள்ள முடியும். மேலும் இந்த திட்டத்திற்க்கான வட்டி விகிதம் மிக குறைவாகவே இருக்கும். இந்த திட்டம் வருகிற ஏப்ரல் 18 வரை மட்டுமே ஆகும்.கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரேபிட் காருக்கான திட்டத்தில் ஏப்ரல் மாதம் வரை இஎம்ஐ கட்டவேண்டியது இல்லை என அறிவித்துள்ளது.இந்த புதிய திட்டத்தின் மூலம் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Read More

ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 மாடலில் புதிதாக விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. புல்லட் 500 யில் சென்சார் பொருத்தப்பட்ட கார்புரேட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்பு பயன்படுத்தப்பட்ட அதே எஞ்சின்தான் பொருத்தப்பட்டுள்ளது.500 புல்லட்டில் கூடுதலாக சிலவற்றை மாறுதல் செய்துள்ளது. புதிய முகப்பு விளக்குகள் இதனை புலி கண் விளக்குகள் என அழைக்கின்றது. டேங்கின் வின்ஜடு பேட்ஜ் ரீடிசைன் செய்துள்ளனர். எலெக்ட்ரிக் ஸ்டார்ட்,மிகவும் சிறப்பான கிளாசிக் லுக்கினை தரும் வகையில் உருவாக்கியுள்ளனர்.முன்புறம் 19 இன்ச் வீல், பின்புறம் 18 இன்ச் வீல் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பைக்கானது பச்சை வண்ணத்தில் (ஃபாரஸ்ட் கீரின்) மட்டும் கிடைக்கும். முன்புறத்தில் 280 மீமி டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 153 மீமி பயன்படுத்தப்பட்டுள்ளது.யூசிஇ (கார்புரேட்டர்) எஞ்சின்499 சிசி சிங்கிள் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச ஆற்றல் 26.1 பிஎச்பி வெளிப்படுத்தும். இதன் டார்க் 40.9 என்எம் ஆகும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.முன்புள்ள கிளாசிக் 500 ஃப்யூல் இன்ஜெக்‌ஷன்…

Read More

டாடா நிறுவனம் பயணிகள் கார் சந்தையில் மிக சிறப்பான இடத்தில் இருந்து வருகின்றது. சில மாதங்களாகவே டாடா காரின் விற்பனை படு மந்தமாக உள்ளது. விற்பனையை அதிகரிக்க பல்வேறு விதமான சலுகைகளை டாடா மோட்டார்ஸ் வழங்கிவருகின்றது.டாடா எஸ்யூவி கார்களான சுமோ, சஃபாரி மற்றும் ஆரியா கார்களுக்கு டாடாவின் கீழ் செயல்படும் ஜாகுவர் லேண்ட்ரோவர் எஞ்சின்களை பயன்படுத்த திட்டமிட்டுள்தாம்.டாடா மோட்டார்ஸ் சிறிய ரக கார்கள் தயாரிப்பில் மிகுந்த அனுபவம் வாய்ந்த நிறுவனமாக விளங்குகின்றது.எனவே டாடாவுடன் இனைந்து புதிய கார்களை உருவாக்குவதற்க்கான திட்டங்கள் இல்லை. ஆனால் நுட்பங்கள் மற்றும் எஞ்சின்களை பகிர்ந்து கொள்ள மட்டும் முடிவு செய்துள்ளதாக ஜாகுவர் லேண்ட்ரோவர் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியுள்ளது தற்பொழுது தயாரிப்பில் உள்ள சிறிய ரக எஞ்சின்கள் மற்றும் வரும்காலத்தில் தயாரிக்கப்பட உள்ள 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களை டாடாவுக்கு தருவோம் என கூறியுள்ளார்.இதனால் டாடா மோட்டார்ஸ் விற்பனை புதுவேகம் எடுக்கும் என…

Read More