Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

யமாஹா நிறுவனத்தின் மிக பிரபலமான ஸ்கூட்டர் ரே இந்தியன் டிசைன் மார்க் 2013 விருதினை வென்றுள்ளது. சிறப்பான டிசைன்களுக்கு இந்தியா டிசைன் கவுன்சில் மூலம் வழங்கப்படுகின்றது.இந்த விருதிற்க்கான தேர்வுமுறை ஆனது வடிவமைப்பு, நிலைப்பு தன்மை, தரம்,செயல்பாடு, தோற்றம், சிறப்பான உருவாக்கம் போன்ற காரானிகளை மையமாக வைத்து இந்தியா டிசைன் கவுன்சில் வழங்குகின்றது. இந்தியா டிசைன் மார்க் விருது இந்தியாவின் டிசைன் கவுன்சில் மற்றும் ஜப்பான் இன்ஷடியூட் ஆஃப் டிசைன் பிரோமோஷன் கூட்டனியில் வழங்கப்பட்டுள்ளது.மிக அழகான நேர்த்தியான வடிவமைப்பினை கொண்ட யமாஹா ரே ஸ்கூட்டர் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இதனால் விற்பனை மிக சிறப்பாகவே உள்ளது. இந்தியன் டிசைன் மார்க் விருதினை இரண்டாம் முறையாக யமாஹா வென்றுள்ளது. கடந்த ஆண்டு YZF-R15 பைக்கிற்க்காக வென்றதுயமாஹா ரே ஸ்கூட்டர் பற்றி படிக்க

Read More

ராயல் என்பீல்டு புல்லட் 500 பைக்கின் முழு விவரங்களை சமீபத்தில் ராயல் என்பீல்டு வெளியிட்டது. தற்பொழுது விலை மற்றும் முதல் கட்டமாக விற்பனை செய்யப்படும் பகுதிகளை வெளியிட்டுள்ளது.புல்லட் 500 யில் 499 சிசி சிங்கிள் சிலிண்டர் டிவின் ஸ்பார்க் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச ஆற்றல் 26.1 பிஎச்பி வெளிப்படுத்தும். இதன் டார்க் 40.9 என்எம் ஆகும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.முதல் கட்டமாக புல்லட்களுக்கு அதிக வரவேற்ப்பு உள்ள பகுதிகளான பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி மற்றும் கேரளா போன்ற பகுதியில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது.ராயல் என்பீல்டு புல்லட் 500 விலை ரூ 1.53 லட்சம் (ஆன்ரோடு விலை)ராயல் என்பீல்டு புல்லட் 500 முழு விவரங்கள் அறிய கீழே சொடுக்கவும்.ராயல் என்பீல்டு புல்லட் 500

Read More

இந்தியாவின் வாகனவியல் துறை தினமும் பல்வேறு மாற்றங்களுடன் பெரிதும் வளர்ந்து வருகின்றது. ஆனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளை ஒப்பீடுகையில் நம் வளர்ச்சி வேகம் சற்று குறைவே ஆகும்.வாகனங்களுக்கான மாசு கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு வசதிகளில் நாம் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் இன்னும் பின் தங்கிதான் உள்ளோம். மாசு கட்டுபாடுகளில் யூரோ 5 விதிகளை கடந்து அடுத்த கட்டத்திற்க்கு மேலை நாடுகள் சென்று கொண்டிருக்கின்றன.யூரோ 5 விதிகளை அடிப்படையாக கொண்ட பாரத் ஸ்டேஜ் 5 வருகிற 2015 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. பாரத் ஸ்டேஜ் 5 விதிகள் அமலுக்கு வந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்.பாரத் ஸ்டேஜ்-5 மாசு கட்டுப்பாடு விதிகளில் கார்பன் வாயு குறைப்பு பாதுகாப்பு வசதிகள், எரிபொருள் சேமிப்பு, எரிபொருள் தரம் மற்றும் மைலேஜ் போன்றவற்றிற்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.பாரத் ஸ்டேஜ் 5 அம்சங்கள்எஞ்சின் மாற்றங்கள்கார் எஞ்சின்கள் மிக குறைவான கார்பன் வாயு மிக…

Read More

ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரின் லிமிடெட் எடிசனை வென்டோ ஸ்டைல் என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ளது. வென்டோ ஸ்டைல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும்.வென்டோ ஸ்டைல் காரில் குரோம் பூச்சுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வென்டோ ஸ்டைல் காரில் உள்ள மாறுதல்கள் குரோம் பூச்சு செய்யப்பட்ட டேஷ்போர்டு, முகப்பு கிரில் குரோம் பூச்சூடன் இருக்கும், புதிய ஆலாய் வீல், டோர்ஸ்ட்ரெப் கார்னிஸ், மிக சொகுசு தன்மை தரக்கூடிய சீட் கவர்கள் என சேர்க்கப்பட்டுள்ளன.வென்டோ ஸ்டைல் எடிசனில் குரோம் பூச்சுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை.ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தபட்டிருக்கும். இந்த எஞ்சின் வெளிப்படுத்தும் ஆற்றல் 105 பிஎச்பி ஆகும். இதன் டார்க் 153 என்எம் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.வென்டோ காரில் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தபட்டிருக்கும். இந்த எஞ்சின் வெளிப்படுத்தும்…

Read More

இணைய உலகின் இதயம் கூகுள் இன்று வெளியிட்டுள்ள டூடுல் இந்தியாவின் முதல் பயணிகள் தொடர்வண்டி இயக்கப்பட்டதனை நினைவு கூறும் வகையில் இருக்கின்றது.மிக முக்கியமான நாட்களை கூகுள் டூடுல்கள் மூலம் நினைவு கூறிவருவதனை அறிவோம். இன்று இந்தியன் தொடர்வண்டி நிறுவனம் 160 ஆண்டுகளை கடக்கின்றது. அதனை கூகுள் டூடுல் மூலம் நினைவுபடுத்துகின்றது.முதல் பயணம் 16 ஏப்ரல் 1853 ஆம் ஆண்டு 400 முக்கிய நபர்களுடன் 3 லோக்கோமொட்டிவ் எஞ்சின்களுடன் (சுல்தான்,சிந்த,சாகிப் எஞ்சின் ) 34 கிமீ பயணத்தினை தொடங்கியது. 14 பெட்டிகளுடன் 57 நிமிடங்களில் மும்பை போரி பந்தரலிருந்து 34 கிமீ தொலைவில் உள்ள தானேக்கு வந்தடைந்தது.இன்று இந்தியன் ரயில்வே நிறுவனம் உலகின் மிக பெரிய தொடர்வண்டி நிறுவனமாகும். மிக அதிகமான தொழிலாளர்களை கொண்டிருப்பதும் இந்தியன் ரயில்வே ஆகும்.அன்று தொடங்கி சிறிய பயணம் இன்று இந்தியாவே பயணிக்கும் பொது போக்குவரத்தின் மாபெரும் சக்தியாக விளங்குகின்றது.இந்தியாவிற்க்கு தொடர்வண்டினை கொண்டு வந்த ஆங்கிலேயரையும் நினைவு கூறலாமே…

Read More

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி கார் என்ற பெயரில் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனைக்கு வரவுள்ளது. போலோ ஜிடி காரில் 1.2 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.1.2 லிட்டர் டிஎஸ்ஐ(TSI) பெட்ரோல் இன்ஜின் 105 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாயந்த இன்ஜினாக இருக்கும். டிஎஸ்ஜி(DSG) 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த இன்ஜின் இந்தியாவின் முதல் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினாக விளங்கும். போலோ ஜிடி காரில் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் வெளிவராது. பாடி அமைப்பு மற்றவை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போலோ எஸ்ஆர் போலவே இருக்கும்.போலோ ஜிடி விபரங்கள் மற்றும் விலை விபரங்கள் இன்னும் தெரியவரவில்லை. ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி கார் இந்த மாதம் இறுதிக்குள் விற்பனைக்கு வரலாம். தற்பொழுது சோதனையில் உள்ளது.ஃபோக்ஸ்வேகன் போலோ எஸ்ஆர் பற்றி படிக்க

Read More