• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

தமிழகத்தில் முதற்கட்டமாக 525 எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க அரசு முடிவு

by MR.Durai
9 August 2019, 11:37 am
in Bus
0
ShareTweetSend

Ashok-Leyland-Circuit-Electric-Bus.

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் முதற்கட்டமாக 525 எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கையை ஃபேம் திட்டத்தின் கீழ் அரசு மேற்கொண்டு வருகின்றது. கோயம்புத்தூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் தலா 100 பேருந்துகள், சேலம், ஈரோடு, வேலூர் மற்றும் திருப்பூர் போன்ற மாவடங்களில் தலா 50 எலக்ட்ரிக் பஸ் உட்பட தஞ்சாவூர் மாவட்டத்திற்கு என 25 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதல் இரண்டு மின்சார பேருந்துகள் இந்த மாதத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் திருவான்மியூர்- சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு-பிராட்வே வழித்தடங்களில் இயக்கப்படும். தமிழகத்தின் பேருந்து உற்பத்தியாளரான அசோக் லேலண்ட் இந்த பேருந்துகளை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்க உள்ளது.

மாநில அரசுகளிடம் இருந்து 14,988 பேருந்துகள் வேண்டும் என்று கோரப்பட்ட நிலையில் திட்ட அமலாக்க மற்றும் ஒப்புதல் குழுவின் (பிஐஎஸ்சி) திட்டங்களின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழகத்தின் எட்டு நகரங்களுக்கு 525 பஸ்கள் உட்பட இந்தியா முழுதும் 66 நகரங்களுக்கு 5,065 மின்-பேருந்துகளை அனுமதித்துள்ளது. இந்த வளர்ச்சி குறித்து தமிழக மூத்த போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ இது எங்கள் பஸ் சேவையை நவீனமயமாக்கவும் மறுசீரமைக்கவும் உதவும்.” என குறிப்பிட்டுள்ளார்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 725 பேருந்துகள், உத்தரபிரதேச மாநிலத்துக்கு 600 பஸ்களும் வழங்கப்பட உள்ளது.

பேருந்தின் நீளத்தைப் பொறுத்து சராசரியாக ஒரு எலக்ட்ரிக் பஸ் விலை ரூ .1.50 முதல் ரூ .2 கோடி வரை மாறுபடுகின்றது. மேலும் ஒவ்வொரு பேருந்துகளுக்கும் வாங்குவதற்கு மத்திய அரசு ஃபேம் 2 ஆம் கட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ரூ .55 லட்சம் மானியம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பேருந்துகள் அந்தந்த மாநில போக்குவரத்துக் கழகத்தின் மூலமாகவே இயக்கபடும் மற்றும் மாநில போக்குவரத்துக் கழங்களுக்கே சொந்தமானவை ஆகும்.

எனவே, அடுத்த சில மாதங்களில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள 8 மாவட்டங்களில் எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்குவது உறுதியாகியுள்ளது.

Tags: Ashok Leyland Circuit-S
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

பாரத் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ‘BB1924’ பஸ் அறிமுகமானது

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் பேருந்தை காட்சிப்படுத்திய பாரத் பென்ஸ்

சென்னையில் இன்ட்ரா-சிட்டி எலக்ட்ரிக் பேருந்து சேவையை துவங்கிய நியூகோ

இந்தியாவின் முதல் மோட்டார் இல்லம்: லக்ஸ்கேம்பர்

புதிய 16 சீட்டர் டாடா மோட்டார்ஸ் விங்கர் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா க்ரூஸியோ பஸ் வெளியானது

ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோர்ஸ் டி1என் எலெக்ட்ரிக் வேன், ஸ்மார்ட் சிட்டி பஸ் அறிமுகம்

ஜேபிஎம் ஈக்கோ லைஃப் எலக்ட்ரிக் பஸ் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

ஆட்டோ எக்ஸ்போவில் ஒலெக்ட்ரா-பிஒய்டி சி9 எலக்ட்ரிக் பஸ் அறிமுகம்

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் டி1என் மின்சார வேன் பிளாட்ஃபாரம் அறிமுகமானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version