சாங்யாங் கார் நிறுவனத்தின் ரெக்ஸ்டன் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை தென்கொரியாவில் மஹிந்திரா சாங்யாங் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

மஹிந்திரா குழுமத்தின் கீழ் செயல்பட துவங்கிய பின்னர் சாங்யாங் மோட்டார்ஸ் டிவோலி காம்பெக்ட் எஸ்யூவி காரை அறிமுகம் செய்தது. அதனை தொட்ந்து தற்பொழுது சந்தையில் விற்பனையில் உள்ள ரெக்ஸ்டன் எஸ்யூவி மாடலை மேம்படுத்தி விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

சாங்யாங் ரெக்ஸ்டன்

மேம்படுத்தப்பட்டுள்ள ரெக்ஸ்டன் காரில் வெளிப்புறத்தில் புதிய செங்குத்தான கிரில்கள் , புராஜெக்டர் முகப்பு விளக்குடன் பகல் நேர எல்இடி விளக்குகள்  மற்றும் பின்புற விளக்குகளில் மாற்றம் பெற்றுள்ளது. மேலும் புதிய வடிவ ஆலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது.

உட்புறத்தில் புதிய சென்டரல் கன்சோல், எல்இடி கேபின் விளக்குகள் , இருக்கையை சூடாக்கும் வசதி, புதிய ஸ்டீயரிங் வீல் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.

சாங்யாங் ரெக்ஸ்டன்

என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

இந்தியாவிலும் மேம்படுத்தப்பட்ட ரெக்ஸ்டான் மாடல் விரைவில் மஹிந்திரா விற்பனைக்கு வரவுள்ளது.