Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவில் 80 சதவீத வாகன விபத்துகளுக்கு காரணம் ஊழல் : நிதின் கட்காரி

by MR.Durai
21 August 2016, 8:00 am
in Auto News, Wired
0
ShareTweetSend

இந்தியாவில் நிகழும் 1.5 லட்சம் சாலை விபத்து மரணங்களில் 80 சதவீத வாகன விபத்துகளுக்கு முக்கிய காரணமே ஊழலால் தரமற்ற வாகனங்கள் மற்றும் பயிற்சி இல்லாத ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் அனுமதியே காரணம் என சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு. நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

ஆந்திராபிரதேசம் போக்குவரத்து துறை சார்பில் நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசுகையில் பழுதான வாகனங்கள் , முறையற்ற பராமரிப்பினால்  இயங்கும் வாகனங்கள் மற்றும் திறமையற்ற ஓட்டுநர்களுக்கான ஓட்டுநர் உரிமம் போன்றவற்றில் போக்குவரத்து துறையில் மலிந்துள்ள ஊழலே காரணமாகும்.

வரும்காலத்தில் விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊழலை குறைப்பதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்துவதன் வாயிலாக ஊழலை கட்டுப்படுத்துவது  , ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனங்கள் பதிவு செய்வது , புதுப்பித்தல் போன்றவற்றில் தற்பொழுது உள்ள நடைமுறைகளை மாற்றியமைத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு ஓட்டுநர் பயிற்சி மையம் மற்றும் ஆராய்ச்சி மையங்களை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் குறிப்பிட்ட இடைவெளியில் அவசர சிகிச்சை மையங்கள் அமைப்பது மற்றும் கூடுதலாக ஆம்பலன்ஸ் சேவையை அதிகரிப்பது , நாட்டில் உள்ள மிகுந்த விபத்து ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ள 786 இடங்களை சீரமைப்பதினால் அடுத்த சில வருடங்களில் விபத்தினை பாதியாக குறைக்கப்படும் என அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் திரு. வெங்கையா நாயுடு பேசுகையில் , கல்வி , கட்டுமானம் மற்றும் கடும் சட்டங்களை அமலாக்குவது விபத்துகளை குறைக்கும் மேலும் குழந்தைகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு சாலை போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

ஆந்திரா முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடு பேசுகையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிகபட்ச பாரம் , அதிக வேகம் போன்றவைகளும் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளதால் அவற்றை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கம் சாலைகளை மேம்படுத்துவது மற்றும் விபத்துகளை தடுக்கும் நோக்கில்  ரூ.11,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. விபத்து குறித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்க….மக்களே..

Related Motor News

7 இருக்கை XEV 9S எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதியை வெளியிட்ட மஹிந்திரா

ராயல் என்ஃபீல்டின் புல்லட் 650 ட்வீன் டீசர் வெளியானது

இந்தியாவில் 7 எஸ்யூவி உட்பட 10 கார்களை வெளியிட ஹோண்டா கார்ஸ் திட்டம்.!

ஹீரோ விடாவின் புராஜெக்ட் VXZ ஸ்போர்ட்ஸ் பைக் டீசர் வெளியானது

சென்னை ஃபோர்டு ஆலையில் என்ஜின் உற்பத்திக்கு ரூ.3,250 கோடி முதலீடு

பெர்ஃபாமென்ஸ் ஹூண்டாய் வெனியூ N-Line எஸ்யூவி அறிமுகமானது

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டஸ்ட்டர் வெளியீட்டு தேதியை அறிவித்த ரெனால்ட் இந்தியா

டஸ்ட்டர் வெளியீட்டு தேதியை அறிவித்த ரெனால்ட் இந்தியா

டிரையம்ப் ஸ்பீடு T4

பண்டிகை காலத்தில் ரூ.16,797 வரை டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்பீடு T4 விலை குறைப்பு

வெற்றிகரமாக 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியை கடந்த ஏதெர் எனர்ஜி

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

டிவிஎஸ் மோட்டாரின் ஸ்கூட்டர் விற்பனை அசுர வளர்ச்சி

6.87 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம்

ஹோண்டா CB350C ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகமானது

ஹார்லி-டேவிட்சன், கேடிஎம், டிரையம்ப், ஏப்ரிலியா பைக்குகளுக்கு ஜிஎஸ்டி மாற்றமில்லை..!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan