இன்று முதல் அதாவது ஏப்ரல் 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய பி.எஸ் 4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறையை தொடர்ந்து வர்த்தக வாகனங்களின் விலை 6 முதல் 10 சதவிதம் வரை உயருகின்றது. வர்த்தக வாகனங்கள் ஏப்ரல் 1ந் தேதி முதல் பி.எஸ் 4 நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. உச்சநீத மன்றம் விதித்த தடை தொடர்ந்து பி.எஸ் 3 வாகனங்கள் விற்பனை நிறுத்தம் அரை டன் முதல் 49 டன் வரையிலான வனிக ரீதியான வாகனங்கள் விலை உயர்வை சந்திக்கும். பி.எஸ் 4 எஞ்சின்களை பெற்ற இரு சக்கர வாகனங்கள் விலை ரூ.500 முதல் ரூ.1000 வரை தொடக்கநிலை சந்தை மாடல்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அரை டன் முதல் 49 டன் வரையிலான வர்த்தக ரீதியான பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் அனைத்தும் விலை 6 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை விலை…
Author: MR.Durai
இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் மற்றும் கோவை ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் கூட்டணியில் சிறப்பு பெர்ஃபாமென்ஸ் ரக ஸ்போர்ட்டிவ் வாகனங்கள் தயாரிக்கப்பட உள்ளது. ஜெடி ஸ்பெஷல் வெய்கிள் நிறுவனம் என்ற பெயரில் தயாரிக்கப்பட உள்ளது. சிறப்பு பெர்ஃபாமென்ஸ் கார்கள் ஜெடி ஸ்பெஷல் வெய்கிள் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. 50:50 க்கு என்ற கூட்டணியில் இருநிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளது. மெர்சிடிஸ் நிறுவத்தின் ஏஎம்ஜி , பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் பிரிவு மற்றும் ஜெஎல்ஆர் நிறுவனத்தின் ஸ்பெஷல் வெய்கிள் பிரிவு போன்ற நிறுவனங்களை அடிப்படையாக கொண்டதாகவே அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கூட்டணியில் பட்ஜெட் விலையில் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் ரக மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் டாடாவின் புதிய ஸ்போர்ட்டிவ் பிராண்டான டாமோ-வின் முதல் கார் மாடலான ரேஸ்மோ காரினை தொடர்ந்து பல கார்களை அறிமுகம் செய்ய ஜெடி கூட்டணி திட்டமிட்டுள்ளது. கோவை ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனம் சிறப்பு பெர்ஃபாமென்ஸ்…
இந்தியாவின் போக்குவரத்து வரலாற்றை நினைவூட்டும் வகையில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டுள்ளது. பல்லாக்கு முதல் மெட்ரோ ரெயில்கள் வரை தபால் தலையில் இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து தபால் தலை வெளியீடு டெல்லியில் அமைந்துள்ள இந்தியாவின் ஒரே பாரம்பரிய போக்குவரத்து அருங்காட்சியகத்தின் உதவியுடன் வெளியிடப்பட்டுள்ள 20 சிறப்பு தபால் தலைகளில் 15 தபால்தலைகளில் இடம்பெற்றுள்ள வாகனங்கள் இந்த அருங்காட்சியத்தில் இடம்பெற்றுள்ளது. வெளியிடப்பட்டுள்ள தபால் தலைகளில் தலா நான்கு பல்லாக்குகள் , மிருகங்களை கொண்டு இழுக்கும் வண்டிகள் , ரிக்ஷா, வின்டேஜ் கார்கள் மற்றும் பொது போக்குவரத்து துறையில் உள்ள வாகனங்களும் இடம்பெற்றுள்ளது. வெளியிடப்பட்டுள்ள தபால் தலைகளின் விலை ரூ.5 முதல் 25 வரை வழங்கப்பட்டுள்ளது.
அதிரடியான உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து நாட்டில் உள்ள 90 சதவீத பி.எஸ் 3 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹோண்டாவின் CBR 250R மற்றும் CBR 150R பைக் வாங்கினால் ரூ. 25,000 வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. பி.எஸ் 3 விற்பனை நிலவரம் ரூ. 25,000 ஆன்ரோடு விலையில் ஹோண்டா நவி விற்பனை செய்யப்பட்டுள்ளது. 6.71 லட்சம் இரு சக்கர வாகனங்களில் 90 சதவீத வாகனங்களை விற்பனை செய்யப்பட்டிருக்கலாம். பெருவாரியான டீலர்கள் வசம் பி.எஸ் 3 வாகனங்கள் இல்லை. இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ நிறுவனம் தற்பொழுதைய நிலவரப்படி ஸ்கூட்டர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 20,000 வரை விலை குறைத்து அதிரடியை கிளப்பியுள்ளது. ஹோண்டாவின் CBR 250R அல்லது CBR 150R பைக் வாங்கினால் ஹோண்டா நவி மினி பைக் இலவசமாக வழங்கப்படுகின்றதாம்.. டிவிஎஸ் அப்பாச்சி மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 20,000 வரை விலை சலுகை மற்றும் இலவச வாகன…
உச்சநீதிமன்ற தடையை தொடர்ந்து பெரும்பாலான வாகன தயாரிப்பாளர்கள் அதிகபட்ச சலுகைகளை வழங்கியதை தொடர்ந்து அதிகப்படியான டீலர்கள் வசம் பி.எஸ் 3 வாகனங்கள் இருப்பு இல்லை என்றே பதிலே பெரும்பாலும் கிடைக்கின்றதாம். பி.எஸ் 3 பைக்குகள் நாடு முழுவதும் 6.71 லட்சம் பிஎஸ் 3 பைக்குகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளது. அதிகபட்சமாக ஹீரோ நிறுவனம் 3.28 லட்சம் இருசக்கர வாகனங்களை வைத்திருகின்றது. ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (சியாம்) உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்த அறிக்கையின்படி 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள், 16,000 கார்கள், 40,000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 96,000 வர்த்தக வாகனங்கள் என சுமார் 8.24 லட்சம் வாகனங்கள் பிஎஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் விற்பனை செய்யப்படாமல் உள்ளது. ஹீரோ , ஹோண்டா ,பஜாஜ் , டிவிஎஸ் என அனைத்து முன்னணி வாகன தயாரிப்பாளர்களும் அதிகபட்சமாக ரூ.22,000 வரை சலுகைகள் மற்றும் இலவச…
பி.எஸ் 3 வாகனங்களை ஏப்ரல் 1ந் தேதி முதல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் பி.எஸ் 3 பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு அட்டகாசமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. பி.எஸ் 3 சலுகைகள் பி.எஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின்களை பொருத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை மற்றும் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒருநாள் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்ற நிலையில் அதிரடி சலுகைகளை வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (சியாம்) உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்த அறிக்கையின்படி 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள், 16,000 கார்கள், 40,000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 96,000 வர்த்தக வாகனங்கள் என சுமார் 8.24 லட்சம் வாகனங்கள் பிஎஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் விற்பனை செய்யப்படாமல் உள்ளது. ஹோண்டா நிறுவனம் அதிரடியாக ரூ.13500 முதல் ரூ.22,000 வரை சலுகைகள் வழங்கியுள்ளது. ஹீரோ நிறுவனம் ரூ.5000 முதல் 13,500 வரை சலுகைகள் வழங்குவதுதடன் இலவச…