புதிய ராயல் என்பீல்டு ஆலை உற்பத்தி தொடங்கியது

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் மூன்றாவது தொழிற்சாலை ரூ. 800 கோடி முதலீட்டில் சென்னை அருகே, வல்லம் வடகல் எனும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ராயல் என்பீல்டு தொழிற்சாலை

800 கோடி ரூபாய் முத­லீட்­டில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது ஆலையில் ஆண்டிற்கு 3,00,000 லட்சம் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற வாகனங்கள் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டில் மூன்றாவது தொழிற்சாலைக்கான இடத்தை தேர்வு செய்த என்பீல்டு நிறுவனம் 15 மாதங்களில் இந்த தொழிற்சாலையை கட்டி முடித்து பயன்பாட்டு கொண்டு வந்துள்ளதால் இந்நிறுவனத்தின் மொத்த உற்பத்தில் 17-18 ஆம் நிதி ஆண்டில் 8,25,000 வாகனங்களாக உயரக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2016-2017 ஆம் ஆண்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் 6,67,135 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்துள்ளது.

 

Exit mobile version